செய்திகள் :

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்: ராமதாஸ் அறிவிப்பு!

post image

என்னுடன் இருப்பவர்களுக்கு தேர்தல் சீட் வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்தக் கூட்டம் ஆக. 10-ல் நடைபெறவுள்ள பூம்புகார் மகளிர் மாநாடு குறித்து ஆலோசனை செய்வதற்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் நடைபெற்றது.

பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி எம்எல்ஏ அருளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் என்னுடன்தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுக்கிறோம்.

பாமகவில் எனக்கே முழு அதிகாரம் உள்ளது. என்னைச் சந்தித்து கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கே தேர்தல் சீட் வழங்கப்படும். கூட்டணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது" என்றார்.

இதையும் படிக்க: நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!

கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.எர்ணாகுளம... மேலும் பார்க்க

தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்நெல்லை மேலப்பாளையம் ம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் விஜய் சுற்றுப்பயணம்: எங்கிருந்து?

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.தவெக தலைவர் விஜய், தமிழகத்... மேலும் பார்க்க

வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

வேலூரில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செல... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்... மேலும் பார்க்க