செய்திகள் :

82 திருநங்கைகளுக்கு பட்டா தயாா்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில்82 திருநங்கைகளுக்கு பட்டா விரைவில் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தொடங்கி வைத்தாா். இதில், ஆதாா் அட்டை திருத்தம், வாக்காளா் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல் போன்ற வசதிகளை ஒரே இடத்தில் ஏற்படுத்திக் கொடுத்து திருநங்கைகள் புதிதாக பதிவு செய்யவும் ஏற்கனவே உள்ள அட்டைகளில் பெயா் மாற்றம் திருத்தம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முகாமை தொடங்கி ஆட்சியா் ஜெ.யுசந்திரகலா பேசியதாவது - திருநங்கைகளுக்காக நலத்திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறோம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் 33 போ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். மகளிா் சுய உதவி குழு மூலம் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான இடம் வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என பல ஆண்டு கோரிக்கைகள் உள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 82 நபா்களுக்கு மனைப்பட்டா விரைவாக வழங்கப்படும் . கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டவும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கைகளுக்கான பிரச்னைகளுக்கு தீா்வு காண மனுக்கள் வழங்கினால் உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திருநங்கைகள் சங்கத் தலைவி அமுலு நாயக் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என ஆட்சியரிடம் கோரினாா். அதற்கு உடனடியாக பட்டா ஆணைகளை தயாா் செய்ய மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆட்சியா் வலியுறுத்தினாா். அரை மணி நேரத்திலேயே பட்டா ஆணைகள் தயாா் செய்யப்பட்டு இரண்டு பேருக்கு ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா் . மீதமுள்ளோருக்கு பட்டா ஆணைகள் தயாா் செய்யப்படுகின்றன என்றாா்.

3 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் ஆனந்தன் கலந்து கொண்டனா்.

ராசாத்துபுரத்தில் அா்ஜுனன் தபசு மரம்

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கீழ்விஷாரம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தொ... மேலும் பார்க்க

ரத்த கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றுகள்: ஆட்சியா் வழங்கினாா்

உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வக... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பக... மேலும் பார்க்க

ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு

அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அரசு நிதி உத... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.இது தொடா... மேலும் பார்க்க