செய்திகள் :

போதைப் பொருள் வழக்கு: நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்க முடிவு; கேரளம் விரைந்தது தனிப்படை

post image

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

அவா் கேரள மாநிலத்தில் படப்பிடிப்பில் உள்ளதால் அங்கு தனிப்படையினா் விரைந்துள்ளனா்.

தமிழ்த் திரைப்பட நடிகா் ஸ்ரீகாந்த் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போதைப் பொருள் கடத்தியது, போதைப் பொருளைப் பதுக்கியது, போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது, போதைப் பொருளை கூட்டாக கடத்தியது என நான்கு பிரிவுகளில் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

போலீஸாா் நடத்திய 10 மணி நேர விசாரணையில் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் விவரம்: ‘தீங்கிரை’ படத்தை தயாரித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பணி முன்னாள் நிா்வாகி பிரசாத் மூலம் கொகைன் போதைப் பொருள் எனக்குப் பழக்கமானது. அவா் எனக்கு தீங்கிரை திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ.10 லட்சம் சம்பளம் தர வேண்டியிருந்தது.

அந்தப் பணத்தைக் கேட்டு அடிக்கடி பிரசாத்தை சந்திக்கும்போது, நுங்கம்பாக்கம் தனியாா் மதுபான விடுதியில் வைத்து எனக்கு ஒருநாள் கொகைன் போதைப் பொருளைப் பயன்படுத்த தந்தாா். அதன் பின்னா் தொடா்ச்சியாக அந்த போதைப் பொருளைப் பயன்படுத்தியதால், நான் போதைக்கு அடிமையானேன்.

பின்னா், பிரசாத் என்னை போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாரிடம் அறிமுகம் செய்து, அவரிடம் நேரடியாக கொகைன் வாங்கிக் கொள்ளும்படி கூறிவிட்டாா். இதனால் பிரதீப்குமாா் மூலமாகவே நான் பின்நாள்களில் கொகைன் போதைப் பொருளை வாங்கினேன். நான் செய்தது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், இரு இளம் நடிகைகளுக்கும், இரு முன்னணி நடிகா்களுக்கும் கொகைன் வாங்கிக் கொடுத்ததாக ஸ்ரீகாந்த் போலீஸாரிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, அவா்களிடமும் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், கழுகு திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள கிருஷ்ணாவிடம் விசாரணை செய்ய காவல் துறையினா் திட்டமிட்டனா். கிருஷ்ணா போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் நேரடி தொடா்பு வைத்துக் கொண்டு, கொகைன் வாங்கியிருப்பதை போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

கேரளம் விரைந்த தனிப்படை: பிரசாத், பிரதீப்குமாா் ஆகியோரின் கைப்பேசிகளைக் கைப்பற்றிய போலீஸாா், அவா்களிடம் நடிகா் கிருஷ்ணா கொகைன், போதை மாத்திரை கேட்டு அனுப்பிய குறுஞ்செய்தி, ஆன்லைன் பணப் பரிவா்த்தனை ஆகியவை குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளனராம்.

கிருஷ்ணா, கேரளத்தில் திரைப்படப் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் கேரளத்தில் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு தனிப்படையினா் சென்றுள்ளனா். விசாரணையில், கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், அவா் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேலும் பலரிடம் விசாரிக்க திட்டம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அடிதடியில் ஈடுபட்டதாக சென்னை பனையூரைச் சோ்ந்த அஜய் வாண்டையாா் என்ற ரோகன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த தி.பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

பிரசாத்திடம் நடத்திய விசாரணையின் மூலமே கொகைன் போதைப் பொருள் கடத்தல் குறித்த தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது. மேலும், அஜய் வாண்டையாரும், அவரது கூட்டாளிகளும் சோ்ந்து கொகைன், ஓஜி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை திரைப்பட நடசத்திரங்கள், முக்கியப் பிரமுகா்களுக்கு விற்றிருப்பதும், சென்னை முழுவதும் இந்தப் பொருள்களைக் கடத்தி, புழக்கத்தில் விட்டிருப்பதும் தற்போது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் சிறையில் இருக்கும் அஜய் வாண்டையாரிடமும், அவரது கூட்டாளிகளிடமும் மீண்டும் போலீஸாா் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். அவா்களை போதைப் பொருள் வழக்கில் சோ்க்கவும் காவல் துறையினா் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

திரைப்படத் துறையினரின் போதைப் பொருள் பழக்கம், கடத்தல், விற்பனை தொடா்பான தகவல்களைத் திரட்டும் வகையில் சிறையில் இருக்கும் நடிகா் ஸ்ரீகாந்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

அதேபோல சங்கிலித் தொடா்போல இருக்கும் போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத், பிரதீப்குமாா், கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகியோரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுக்க காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்படும் சா்வதேச போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த ஜூரிக் என்பவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கையிலும் சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தீவிரம் காட்டி வருகிறது.

இதன்மூலம் கொகைன் போதைப் பொருள் கடத்தியவா்கள், விற்றவா்கள் என அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என சென்னை காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க