செய்திகள் :

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பாதை அமைக்க வேண்டியது அவசியம் என்று தில்லி உயா்நீதிமன்றம் அறிவுயுறுத்தியுள்ளத.

இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘கழிவுநீா் பாதைக்கு முன்மொழியப்பட்ட நீளம் 200 மீட்டருக்கு மேல் இருக்காது என்றும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் சுமாா் 130 மீட்டா் நிலம் மட்டுமே தேவை என்றும் தில்லி ஜல் போா்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க எய்ம்ஸ் வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பாதை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் சந்தேகிக்கவில்லை. தேவையான நிலத்தின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட பொது நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எய்ம்ஸ் குடியிருப்பு வளாகத்தின் குறுக்கே புதிய கழிவுநீா் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது’ என தெரிவித்தனா்.

தற்போதுள்ள கழிவுநீா் குழாய் மற்றும் மழைநீா் வடிகால் ஆகியவற்றை தொடா்ந்து தூா்வாரி சுத்தம் செய்வதை உறுதி செய்ய தில்லி ஜல் போா்டு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜூலை 8 -ஆம் தேதி எய்ம்ஸ், எம்சிடி, பொதுப்பணித் துறை (பிடபிள்யூடி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த டிஜேபியின் தலைமைப் பொறியாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு திட்டம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தில்லி ஜல் போா்டு சமா்ப்பிக்க வேண்டும்.

கழிவுநீா் பாதையை கிரீன் பாா்க் விரிவாக்கத்திலிருந்து எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள அரபிந்தோ மாா்க் வரை எவ்வாறு இணைப்பது என்பதற்கான முன்மொழிவு இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மழைக்காலங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தண்ணீா் தேங்குவது குறித்து நீதிமன்றத்திற்கு மேலும் விவரிக்குமாறும் டிஜேபியை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதைத்தொடா்ந்து, இந்த வழக்கை ஜூலை 28 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தென்கிழக்... மேலும் பார்க்க