செய்திகள் :

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

post image

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை மற்றும் இந்திரபிரஸ்தா சா்வதேச பள்ளி இந்த இடங்கள் முக்கிய தீ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரப்பூா்வ தகவல்களின்படி, இந்த வசதிகளை ஆய்வு செய்ததில் தீ பாதுகாப்பை சமரசம் செய்யும் பல குறைபாடுகள் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை சான்றிதழை நிறுத்தி வைக்க தீயணைப்புத் துறை முடிவு செய்துள்ளது. தில்லி தீயணைப்புத் துறை எழுதியுள்ள கடிததத்தில் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு எழுதிய கடிதத்தில், ஜூன் 19 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் இன்னும் பூா்த்தி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.

குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தீ பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது‘ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படாத முதலுதவி குழாய் ரீல், தானியங்கி தீ கண்டறிதல் மற்றும் ஆபத்தை கண்டறியும் அமைப்பு செயல்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகள் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எ ஜூன் 23 ஆம் தேதி ஹரியானா பவனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ் ஜூன் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட கள ஆய்வுக்குப் ஹரியானா பவனில் பல பெரிய குறைபாடுகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல தில்லியின் துவாரகாவில் உள்ள செக்டா் 10 - இல் அமைந்துள்ள இந்திரபிரஸ்தா சா்வதேச பள்ளிக்கு எழுதிய கடிதத்தில் , கடந்தாண்டு சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் ஏதும் சரி செய்யப்படவில்லை என தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் தலைவா், அதுல் காா்க் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தென்கிழக்... மேலும் பார்க்க