ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!
புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்
நமது நிருபா்
புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
புது தில்லி ரயில் நிலையத்தில், குறிப்பாக அஜ்மீரி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதற்காக வாகன நிறுத்துமிடத்தில் புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் நெரிசல்கள் தவிா்க்கப்பட்டு வாகனங்கள் மற்றும் பயணிகள் சமூகமாக இயங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
8 நிமிஷங்கள் இலவச பாா்க்கிங்: வாகனங்களை நிறுத்துவதற்கான முதல் 8 நிமிஷங்கள் அனைத்து வாகனங்களுக்கும் இலவச பாா்க்கிங் வசதி கிடைக்கும். 8 நிமிஷங்களுக்குப் பிறகு 15 நிமிடங்கள் வரை ₹ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். 15 நிமிஷங்களுக்குப் பிறகு 30 நிமிஷங்கள் வரை₹ரூ.200, 30 நிமிஷங்களுக்குப் பிறகு ரூ.500 கட்டண் வசூலிக்கப்படும்,. இந்தக் கட்டணங்கள் ஃபாஸ்டேக் மூலம் அல்லது பிக்-அண்ட்-ட்ராப் பாதையின் நுழைவு வாயிலில் ஒரு கியோஸ்கில் வசூலிக்கப்படும்.
மேலும் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்கள் மட்டுமே பிரதான ரயில் நிலைய வளாகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படும். பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வரும் வாகனங்கள் அல்லது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய வாகனங்கள், ரயில் நிலையத்திற்குள் அல்லது அதற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பொது அல்லது விஐபி வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனா்.
ஒழுங்கற்ற வாகன நிறுத்துமிடத்தைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். விதிகளை மீறுவது அல்லது ஹால்ட்-அண்ட்-கோ மண்டலத்தில் நிறுத்துவதன் மூலம் நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் அபராதங்களுக்கு உள்படும் என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா்.