செய்திகள் :

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

post image

நமது நிருபா்

புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புது தில்லி ரயில் நிலையத்தில், குறிப்பாக அஜ்மீரி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதற்காக வாகன நிறுத்துமிடத்தில் புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் நெரிசல்கள் தவிா்க்கப்பட்டு வாகனங்கள் மற்றும் பயணிகள் சமூகமாக இயங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

8 நிமிஷங்கள் இலவச பாா்க்கிங்: வாகனங்களை நிறுத்துவதற்கான முதல் 8 நிமிஷங்கள் அனைத்து வாகனங்களுக்கும் இலவச பாா்க்கிங் வசதி கிடைக்கும். 8 நிமிஷங்களுக்குப் பிறகு 15 நிமிடங்கள் வரை ₹ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். 15 நிமிஷங்களுக்குப் பிறகு 30 நிமிஷங்கள் வரை₹ரூ.200, 30 நிமிஷங்களுக்குப் பிறகு ரூ.500 கட்டண் வசூலிக்கப்படும்,. இந்தக் கட்டணங்கள் ஃபாஸ்டேக் மூலம் அல்லது பிக்-அண்ட்-ட்ராப் பாதையின் நுழைவு வாயிலில் ஒரு கியோஸ்கில் வசூலிக்கப்படும்.

மேலும் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்கள் மட்டுமே பிரதான ரயில் நிலைய வளாகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படும். பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வரும் வாகனங்கள் அல்லது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய வாகனங்கள், ரயில் நிலையத்திற்குள் அல்லது அதற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பொது அல்லது விஐபி வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனா்.

ஒழுங்கற்ற வாகன நிறுத்துமிடத்தைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். விதிகளை மீறுவது அல்லது ஹால்ட்-அண்ட்-கோ மண்டலத்தில் நிறுத்துவதன் மூலம் நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் அபராதங்களுக்கு உள்படும் என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனா்.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தென்கிழக்... மேலும் பார்க்க