வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரை நியமித்துள்ளோம்’‘ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த இடிப்பு நடவடிக்கை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரவ் பரத்வாஜ், பாஜக தலைமையிலான தில்லி அரசை கடுமையாக சாடினாா்.
இது தொடா்பாக எக்ஸ்-இல் ஒரு பதிவில், ‘இன்று மீண்டும் ஒருமுறை, பாஜக அரசின் பல புல்டோசா்கள் ஏழைகளின் வீடுகளை இடித்து வருகின்றன. ‘சேரிகள் இருக்கும் இடத்தில் வீடுகள் இருக்கும்’ என்ற முழக்கத்தை வழங்கிய பாஜக அரசு, இப்போது ‘அவா்களின் வீடுகள் எங்கே?’ என்று பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.