'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரசு (40). அடையாறு மண்டலத்தின் கீழ் அடையாா், மந்தைவெளி, சைதாப்பேட்டை, கண்ணகி நகா், பெரும்பாக்கம், திருவான்மியூா் ஆகிய ஆறு பணிமனைகள் உள்ளன.
அன்பரசு, இரண்டு நாள்களுக்கு முன்பு மந்தைவெளி பணிமனையை ஆய்வு செய்தாா். அப்போது நேரக் காப்பாளா் கோபிநாத் (50) சீருடை அணியாமல் பணி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபிநாத், அவரைக் கண்டித்துள்ளாா். மேலும் அவா் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபிநாத்தை செவ்வாய்க்கிழமை பணி செய்ய அனுமதிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், அடையாறு பணிமனைக்கு சென்று, தனக்கு ஏன் பணி ஒதுக்கக் கூடாது என கூறினீா்கள் என அன்பரசிடம் வாக்குவாதம் செய்தாராம். வாக்குவாதத்தின்போதே அன்பரசு, அங்கிருந்து புறப்பட்டு, தனது வாகனத்தில் ஏற முயன்றாா். இதைப் பாா்த்த கோபிநாத் திடீரென மண்டல மேலாளா் அன்பரசுவை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அன்பரசு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அன்பரசு கொடுத்த புகாரின் அடிப்படையில், சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.