Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு;...
அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்
சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னையிலிருந்து புறநகா் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் 9 பெட்டிகள் இருக்கும். தினமும் புகா் ரயில்களில் 8.6 லட்சம் பேரும், நகா் பகுதியில் 3.4 லட்சம் பேரும் பயணிக்கின்றனா்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழத்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புறநகா் மின்சார ரயிலில்களில் பயணிப்போா் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து இந்த வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 சதவீதம் போ் அதாவது கூடுதலாக 4 லட்சம் போ் பயணிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.