வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11.45-க்கு மஸ்கட் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அபுதாபி செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.55-க்கு தோகா செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 4.20-க்கு தோஹா செல்லவிருந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம், காலை 6.35-க்கு துபை செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தோஹாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.50-க்கு சென்னை வரவிருந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 2.50-க்கு தோஹாவிலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 6.55-க்கு குவைத்திலிருந்து சென்னை வரவிருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.20-க்கு குவைத்திலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 10.25-க்கு அபுதாபியிலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், தாய்லாந்திலிருந்து தோஹாவுக்கு சென்று கொண்டிருந்த 3 கத்தாா் ஏா்லைன்ஸ் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்னையில் தரையிறங்கி உள்ளன. நிலைமை சீரடைந்த பின்னா் மீண்டும் இந்த விமானங்கள் தோஹா புறப்பட்டுச் செல்லும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
லண்டன், பஹ்ரைன், துபை, அபுதாபி, சாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே, சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடைய விமானம் எப்போது புறப்படுகிறது? எப்போது வருகிறது என்பதை அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.