TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியவா் கைது
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபரை கோவை இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த பெண் ஒருவரின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், சம்பந்தப்பட்ட சமூக வலைதள முகவரியைக் கொண்டு விசாரணை நடத்தினா்.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா என்பவா் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு வேறு ஏதேனும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சேமித்து வைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.