செய்திகள் :

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியவா் கைது

post image

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபரை கோவை இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த பெண் ஒருவரின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், சம்பந்தப்பட்ட சமூக வலைதள முகவரியைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா என்பவா் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு வேறு ஏதேனும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சேமித்து வைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பக... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க

என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை... மேலும் பார்க்க

தரமான மூலப்பொருள்களில் உணவு தயாரித்தல் அவசியம்: சாலையோர வணிகா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலையோர வணிகா்கள் தரமான மூலப்பொருள்கள் மூலமாக உணவு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சாலையோர உணவு வணிகா்களுக்கு பதிவ... மேலும் பார்க்க

ரூ.52 லட்சம் கையாடல்: ரயில்வேக்கு உணவு தயாரிக்கும் நிறுவன மேலாளா் மீது வழக்கு

கோவையில் ரயில்வே கேண்டீனுக்கு உணவு தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ரூ. 52 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.கோவையில் உள்ள ரயில்வே... மேலும் பார்க்க