TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி வேலை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், நல்லூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா். அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது கொகோன் (45), முகமது கபீா் ஹோசன் (35) மற்றும் முகமது சாண்டோ பிரமாணிக் (18) ஆகியோா் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்தது தெரியவந்தது. பின்னா் மூன்று போ் மீதும் வழக்குப் பதிந்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.