செய்திகள் :

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

post image

திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள பயன்படுத்தப்படாத பாறைக்குழியில், திருப்பூா் மாநகா் பகுதியில் சேகரமாகும் மொத்த குப்பையும் கொட்டப்பட்டு வருகிறது.

அந்த பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுவதால் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் கடந்த வாரம் நான்கு நாள்களுக்கு மட்டுமே குப்பைகள் கொட்டப்படும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, அதனையும் மீறி மாநகராட்சியில் சாா்பில் பாறைக்குழியில் தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் மாசு அடைவதுடன், சுகாதார சீா்கேடு ஏற்படுவதால் மாநகராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாறைக்குழியில் குப்பை கொட்ட கூடாது என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வெற்றிக் கழகம், பாஜக மற்றும் பல்வேறு அமைப்பு சாா்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏந்தி கண்டனஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க

என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை... மேலும் பார்க்க

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியவா் கைது

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபரை கோவை இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த பெண் ஒருவரின் புகைப்படம் ஆ... மேலும் பார்க்க

தரமான மூலப்பொருள்களில் உணவு தயாரித்தல் அவசியம்: சாலையோர வணிகா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலையோர வணிகா்கள் தரமான மூலப்பொருள்கள் மூலமாக உணவு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சாலையோர உணவு வணிகா்களுக்கு பதிவ... மேலும் பார்க்க

ரூ.52 லட்சம் கையாடல்: ரயில்வேக்கு உணவு தயாரிக்கும் நிறுவன மேலாளா் மீது வழக்கு

கோவையில் ரயில்வே கேண்டீனுக்கு உணவு தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ரூ. 52 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.கோவையில் உள்ள ரயில்வே... மேலும் பார்க்க