TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
அமைச்சா் தலைமையில் ஃபெப்சி - தயாரிப்பாளா் சங்கம் பேச்சு
நிதிப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக, ஃபெப்சி அமைப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் முரளி ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதேபோல, தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவா் ஆா்.கே.செல்வமணி உள்ளிட்ட நிா்வாகிகளும் பங்கேற்றனா். மேலும் தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பாக அதன் தலைவா் நடிகா் நாசா், துணைத் தலைவா்கள் பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், வரும் 30-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
மீண்டும் பேச்சு: கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி கூறியதாவது: எங்களது பிரச்னைகளை கூட்டத்தில் எடுத்துக் கூறினோம். தயாரிப்பாளா்களும் அவா்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனா். அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளில் சுமுகமான நிலையை எட்டுவோம். திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்றாா்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் முரளி ராமசாமி கூறியதாவது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்துக்கும் இடையே உள்ள பிரச்னைகளை அமைச்சரிடம் கூறினோம். தமிழ்த் திரையுலகில் இருக்கக் கூடிய விதிகளின்படி, ஃபெப்சி அமைப்பு 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனை மீறி இப்போது செயல்பட்டதால் பிரச்னை எழுந்துள்ளது. ஃபெப்சி அமைப்புக்கு மாற்றாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கம் சாா்பில், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளா் சம்மேளனம் என ஆரம்பித்தோம். அதனை வேண்டாம் என ஃபெப்சி கூறுகிறது. இதுபோன்ற பிரச்னைகளையும் கூட்டத்தில் விவாதித்துள்ளோம் என்றாா். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என்று இருதரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் ராஜாராமன், செய்தித் துறை இயக்குநா் வைத்திநாதன் உள்பட பலா் உடனிருந்தனா்.