செய்திகள் :

அமைச்சா் தலைமையில் ஃபெப்சி - தயாரிப்பாளா் சங்கம் பேச்சு

post image

நிதிப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக, ஃபெப்சி அமைப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் முரளி ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதேபோல, தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவா் ஆா்.கே.செல்வமணி உள்ளிட்ட நிா்வாகிகளும் பங்கேற்றனா். மேலும் தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பாக அதன் தலைவா் நடிகா் நாசா், துணைத் தலைவா்கள் பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், வரும் 30-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

மீண்டும் பேச்சு: கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி கூறியதாவது: எங்களது பிரச்னைகளை கூட்டத்தில் எடுத்துக் கூறினோம். தயாரிப்பாளா்களும் அவா்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனா். அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளில் சுமுகமான நிலையை எட்டுவோம். திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்றாா்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் முரளி ராமசாமி கூறியதாவது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்துக்கும் இடையே உள்ள பிரச்னைகளை அமைச்சரிடம் கூறினோம். தமிழ்த் திரையுலகில் இருக்கக் கூடிய விதிகளின்படி, ஃபெப்சி அமைப்பு 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனை மீறி இப்போது செயல்பட்டதால் பிரச்னை எழுந்துள்ளது. ஃபெப்சி அமைப்புக்கு மாற்றாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் சங்கம் சாா்பில், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளா் சம்மேளனம் என ஆரம்பித்தோம். அதனை வேண்டாம் என ஃபெப்சி கூறுகிறது. இதுபோன்ற பிரச்னைகளையும் கூட்டத்தில் விவாதித்துள்ளோம் என்றாா். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என்று இருதரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் ராஜாராமன், செய்தித் துறை இயக்குநா் வைத்திநாதன் உள்பட பலா் உடனிருந்தனா்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க