செய்திகள் :

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

post image

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தார். மேலும், அந்தக் காலகட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படை மீறப்பட்டதை இந்தியர் யாரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அவசர நிலையை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.

இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல் இருந்தது!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க... ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க

இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக டிராகன் விண்கலத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபா... மேலும் பார்க்க

இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் ... மேலும் பார்க்க

ஜம்முவில் கனமழை: ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 9 பேர் மீட்பு!

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேரை காவல்துறை மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-ஸ்ர... மேலும் பார்க்க