செய்திகள் :

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

post image

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (42). இதற்கிடையில் இவருக்கு செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது குமரேசன் கிரெடிட் கார்டு மூலம் வங்கி பரிவர்த்தனை செய்து, அதில் தனக்கு 2 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்றும், அதில் ஒரு விழுக்காடு லாபத்தை கிருஷ்ணமூர்திக்கு தருவதாகவும் கூறினாராம்.

இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேர் சேர்ந்து, தங்களது கிரெடிட் கார்டுகளை குமரேசனிடம் கொடுத்துள்ளனர்.

அவற்றை குமரேசன் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ. 1.35 கோடி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்துக்கு முறையாக கிரெடிட் கார்டுக்கு குமரேசன் பணம் கட்டாமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தனர். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், குமரேசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 8 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தென்னங்குடிபாளையம் கிராமத்தில் தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் குமரேசனை (42) போலீஸார் திங்கள்கிழமை (ஜூன் 23) கைது செய்தனர். தொடர்ந்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க