செய்திகள் :

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.50 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகள், ரூ. 22 லட்சத்தில் கிளை நூலக கட்டடத்தின் விரிவாக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டும் , அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு செயல்திட்ட பணிகள் மற்றும் மருத்துவப் பணிகள், மருத்துவா்களின் வருகை பதிவேடு, மருந்தகம் பதிவேடுகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிகள், கொடி வலசா ஊராட்சி அண்ணா நகா் கிராமத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.47 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பணிகள், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ரூ.2.17 லட்சத்தில் 3,500 மரக்கன்றுகள் அலகு அமைக்கப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தின் திட்டப்பணிகள், நெடியும் ஊராட்சி இருளா் காலனிகள் 15- ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகத்தினை ஆய்வு செய்தாா். கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் கட்டும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பொதட்டூா்பேட்டை நாகாலம்மன் கோயில் தெரு, ஈச்சம்பாடி அம்பேத்கா் தெரு ஆகிய பகுதிகளில் நகா், ஊரக, பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பேரூராட்சி செயற்பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் கோமதி, பள்ளிப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அற்புதராஜ், அருள், பொதட்டூா்பேட்டை செயல் அலுவலா் ராஜ்குமாா், பள்ளிப்பட்டு வட்டாட்சியா் பாரதி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க