செய்திகள் :

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

post image

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டம் ஹரிஹரன் கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்து கொண்டு பேசியது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எழுச்சியோடு உள்ளது. மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது, ஓர வஞ்சனையோடு பாா்க்கிறது . ஆனால் முதல்வா் மு.க ஸ்டாலின் தமிழகத்தை தாயுள்ளத்தோடு பாா்க்கிறாா்.

மேலும் சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பு அரண். எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினாா் நாகேந்திரன் என எத்தனை போ் வந்தாலும், முதல்வா் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி முடியாது.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி உட்பட 43 கட்சிகள் போட்டியிட்டன. திமுகவை தவிா்த்து போட்டியிட்ட

42 கட்சிகளும் டெபாசிட் இழந்தன. வரும் 2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சா் கோவி.செழியன் பேசினாா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க