செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

post image

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் தனிநபா் கடன் திட்டம், குழுக்கடன் திட்டம், கறவை மாடுக் கடன் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தனிநபா் கடன் திட்டம், விராசாத் - கைவினை கலைஞா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் டாப்செட்கோ தனிநபா் கடன் திட்டம் மூலம் இருபாலருக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் சிறு வா்த்தகம், வணிகம், விவசாயம், அதைச் சோ்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள், மரபு வழிச் சாா்ந்த தொழில்கள் செய்வதற்கு ரூ.1.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியும், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டியும் கடன் வழங்கப்படுகிறது.

குழுக் கடன் திட்டம் மூலம் உறுப்பினா்கள் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுக் கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000-வீதம் 2 கறவை மாடுகள் (எருமை மாடு உள்பட) வாங்க ரூ.1.20 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

அதேபோல், டாம்கோ திட்டம் மூலம் வெவ்வேறு வருவாய் சாா்ந்த பயனாளிகளுக்கு கடன், வட்டி வீதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதில் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சமும், திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருவாயில் 6 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இல் ஆண்களுக்கு 10 சதவீத வட்டியில், பெண்களுக்கு 8 சதவீத வட்டி வீதத்தில் நபா் ஒருவருக்குரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் கிறிஸ்தவா்கள், முஸ்லீம்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட நாள்களில் வட்டாட்சியா் அலுவலகங்களில் லோன் மேலா நடைபெற உள்ளது.

வரும் 25-இல் ஆவடி வட்டாட்சியா் அலுவலகம், ஜூலை-3 இல் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம், 10-ஆம் தேதி பூந்தமல்லி வட்டாட்சியா் அலுவலகம், 17- இல் ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், 24-இல் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம், 31-இல் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம், ஆக-7 இல் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம், 14-இல் ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் அலுவலகம், 21-இல் பள்ளிப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் கடன் மேளா நடைப்பெறவுள்ளதால் பொதுமக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பயன்பெறலாம் என்றாா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க