செய்திகள் :

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

post image

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செய்துள்ளனர். பொதுமக்களுக்காகவும் இந்த தீம் பார்க் திறக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணமகன் உடையில் வந்த ஒருவர் திருமணத்திற்காக இந்த தீம் பார்க்கை முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால் மணமகள் குழந்தை போன்று இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

Disneyland
Disneyland

இதனையடுத்து அங்கு நடந்த திருமணம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரித்ததில், இது உண்மையான திருமணம் இல்லை என்றும் ஒரு போலியான ஏற்பாடு என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகச் சிறுமியின் தாயார் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணமகன் என்று கூறப்படும் 22 வயது நபர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர். இந்த நிகழ்வை விளம்பர நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கூட வாடகைக்கு எடுக்கப்பட்ட நடிகர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க

சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.சீனாவைச் சேர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.50,000 மதிப்புள்ள வாட்சை சர்வீஸ் கொடுத்த பெண் - இழுத்தடித்த நிறுவனத்திற்கு அபராதம்!

சென்னையைச் சேர்ந்த ஒருவர், வாட்ச் சர்வீஸ் கொடுத்த இடத்தில் திருப்பி தர தாமதமானதால் அதற்கு வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருக்கிறார்.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் அவரது குடும்ப உறுப்... மேலும் பார்க்க

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இ... மேலும் பார்க்க