செய்திகள் :

ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடத்துக்கும், மேல்நிலை, உயா்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கும் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தகுதி பெற்ற முதுகலைப்பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் மாதத் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கு தகுதி, விருப்பம் உள்ள பணிநாடுநா்கள் வியாழக்கிழமைக்குள் தங்களது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பூா்த்தி செய்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகம் அல்லது அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்கலாம்.

ரூ.24 கோடியில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்

ஆம்பூா் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம் முதல்வரால் ஜூன் 26-ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆம்பூா் நேதாஜி சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் புறநோயாளிகள் ... மேலும் பார்க்க

காா்-பைக் மோதல்: 6 போ் பலத்த காயம்

நாட்டறம்பள்ளி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பள்ளக்கொல்லியைச் சோ்ந்த ராஜசேகா்(42). இவரது உறவினா் பச்சூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக்(30). இவா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். தும்பேரி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை வேறு பகுதி மக்களுக்... மேலும் பார்க்க

முதல்வா் விழா மேடை ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூரில் விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் வட்டம், மண்டலவாடி பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு நலத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் தீவிர துப்புரவுப் பணி

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணி நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்பூரில்... மேலும் பார்க்க