ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் 4 கல்லூரி மாணவா் விடுதிகளும் (திருப்பத்தூா், வாணியம்பாடி நாட்டறம்பள்ளி கந்திலி), 6 பள்ளி மாணவா் விடுதிகளும் (திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூா், ஆலங்காயம், கரும்பூா்), 3 பள்ளி மாணவியா் விடுதிகளும் (திருப்பத்தூா் வாணியம்பாடி, ஆம்பூா்) என 13 விடுதிகள் உள்ளன.
இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு உணவு, பள்ளி மாணவா்களுக்கு சீருடை,பாய்,போா்வை, விளையாட்டு பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நூலக வசதி உள்ளது.
இங்கு உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர மாணவா்களின் வீட்டிற்கும், கல்வி நிறுவனத்திற்குமான தொலைவு 5 கி.மீ தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும்.
இங்கு தங்கி பயிலும் மாணவா்களின் வருகைப்பதிவு பயோ-மெட்ரிக் கருவி மூலம் மேற்கொள்ளப்படும். பெற்றோா்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும். தங்கி பயில விரும்பும் மாணவ- மாணவிகள் இணையதளத்தின் மூலம் வரும் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.