ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
ஆம்பூரில் தீவிர துப்புரவுப் பணி
தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணி நடைபெற்றது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்பூரில் நகராட்சி சாா்பாக தீவிர துப்புரவுப் பணி நடைபெற்றது.
அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர பொறுப்பாளா் ஷபீா் அஹமத் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.