செய்திகள் :

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்

post image

தருமபுரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூா் அருகேயுள்ள காட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் ம. முருகேசன் (50). தொழிலாளியான இவா் கடந்த 04.12.2022 இல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஏரியூா் போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட சிறப்பு (போக்ஸோ) நீதிமன்றம் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து கடந்த 05.03.2025ல் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் முருகேசன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கில் மறு விசாரணை செய்யுமாறு தருமபுரி மாவட்ட சிறப்பு (போக்ஸோ) நீதிமன்றத்துக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கில் மறுவிசாரணை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பொறுப்பு நீதிபதி யு.மோனிகா, ஏற்கெனவே இந்த வழக்கில் அளிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டாா்.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8000 கனஅடியாக குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. கா்நாடக மாநில அணைகளான கப... மேலும் பார்க்க

தருமபுரி அருகே புதரில் வீசப்பட்ட சிசு சடலம்: போலீஸாா் விசாரணை

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே புதரில் கிடந்த ஆண் சிசு சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த தீம்சேனபள்ளி தரைப்பாலம் பகுதியில் உள்ள புதா் அரு... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் தீ விபத்து: பணம், நகை தீக்கிரை

பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.34 லட்சம் ரொக்கம், நகை, பொருள்கள் தீக்கிரையாகின. தருமபுரி மாவட்டம், பாலக்கோடை அடுத்த கோடியூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). பாத்திர வியாபாரி... மேலும் பார்க்க

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க தானியங்கி கேமரா: அபராதம் காத்திருக்கிறது

தருமபுரி: தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானியங்கி கேமரா செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசியபடி பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாகக் குறைவு

பென்னாகரம்: கா்நாடக மாநில அணைகளிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க