ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8000 கனஅடியாக குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கா்நாடக மாநில அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை மாலை 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக குறைந்தது.
தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் 3 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளாா்.
வெள்ள அபாய எச்சரிக்கை
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் காவிரியில் நீா்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு சற்று குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது மீண்டும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 15,000 முதல் 30,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.