வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் தீ விபத்து: பணம், நகை தீக்கிரை
பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.34 லட்சம் ரொக்கம், நகை, பொருள்கள் தீக்கிரையாகின.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடை அடுத்த கோடியூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). பாத்திர வியாபாரியான இவா் தனது மனைவி சத்யாவுடன் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வியாபாரத்துக்கு சென்றுவிட்டாா்.
பகலில் திடீரென அவரது வீட்டிலிருந்து புகை வந்தது. அதன்பிறகு வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் பாலக்கோடு தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் வீட்டிலிருந்த ரூ.1.34 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகை, வீட்டு உபயோகப் பொருள்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீயில் கருகின.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பாலக்கோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.