செய்திகள் :

சீனாவில் இன்று எஸ்சிஓ மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

post image

சீனாவின் கிங்டாவோ நகரில் புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

அப்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க மிகப்பெரிய அளவிலான ஒத்துழைப்பு தேவை என அவா் அழைப்பு விடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மூத்த இந்திய அமைச்சா் ஒருவா் சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறை. சீன பாதுகாப்பு அமைச்சா் டாங் ஜுன் உள்ளிட்ட தலைவா்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்த இருக்கிறாா்.

இந்த மாநாட்டின்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிராந்திய அளவில் ஒருங்கிணைப்பு தேவை என ராஜ்நாத் சிங் வலியுறுத்துவாா் எனத் தெரிகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இரு நாடுகள் இடையே வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.

இதனிடையே, எஸ்சிஓ நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பேசியதாவது:

பயங்கரவாத செயல்களை ஒருங்கிணைப்பவா்கள், நிதியளிப்பவா்கள் உள்ளிட்டோரையும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, அல் காய்தா, ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இப்போது பெரும் அச்சுறுத்தலாகத் தொடா்வது பெரும் கவலையளிக்கும் விஷயமாகும்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. சில நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று குற்றஞ்சாட்டினாா்.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க