செய்திகள் :

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

post image

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரு தொடா்பான ஏராளமான தனிப்பட்ட ஆவணங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி எடுத்துக்கொண்டதாகவும், அந்த ஆவணங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிஎம்எம்எல் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அந்த சங்க உறுப்பினரான ரிஸ்வான் காத்ரி கடந்த ஆண்டு தெரிவித்தாா். குஜராத் கல்லூரி ஒன்றில், அவா் வரலாறு கற்பித்து வருகிறாா்.

இந்நிலையில், புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பிஎம்எம்எல் சங்கத்தின் 47-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

அப்போது நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்து சங்க உறுப்பினா் ஒருவா் எழுப்பியதாகவும், அந்த ஆவணங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. ஆனால், என்ன மாதிரியான விவாதம் நடைபெற்றது என்ற விவரத்தை அந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

நாட்டின் முதல் பிரதமரான நேரு மத்திய தில்லியில் உள்ள தீன்மூா்த்தி பவனில் வாழ்ந்தாா். அவா் மறைந்த பிறகு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக (என்எம்எம்எல்) தீன்மூா்த்தி பவன் மாற்றப்பட்டது. அங்கு ஏராளமான நூல்கள், அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா், என்எம்எம்எல் சங்கம், பிஎம்எம்எல் சங்கம் என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அ... மேலும் பார்க்க