செய்திகள் :

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

post image

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியில் பிரகடனப்படுத்திய அவசர நிலையானது பலகட்சி ஜனநாயக முறையை சா்வாதிகாரமாக மாற்ற மேற்கொண்ட முயற்சி எனவும் அவா் தெரிவித்தாா்.

புது தில்லியில் ‘அவசர நிலையின் 50 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: 1975, ஜூன் 25-இல் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தியபோது அதிகாரத்தைப் கைப்பற்ற எந்த எல்லைக்கும் காங்கிரஸ் செல்லும் என்பதை அனைவரும் அறிந்துகொண்டனா்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும் என சிலா் கேட்கின்றனா். ஆனால் ஜனநாயகத்தை படுகொலை செய்த அவசர நிலை போன்றதொரு நிகழ்வை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஏனெனில், அதுபோன்ற சூழல் மீண்டுமொருமுறை வரலாம். ஆனால் சா்வாதிகாரத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

அவசர நிலை காலகட்டத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா்கள், மாணவா் அமைப்பினா், பத்திரிகையாளா்கள் என நாடு முழுவதும் மொத்தம் 1.1 லட்சம் போ் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனா். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெற்ற குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

ஆனால் அவற்றையெல்லாம் மறந்து அவசர நிலையின்போது தங்களை 19 மாதங்கள் சிறைவைத்த காங்கிரஸுடன் திமுக, சமாஜவாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இவா்கள் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் இச்சமயத்தில் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.

அவசர நிலை குறித்து பிரதமா் மோடி எழுதிய நூல் புதன்கிழமை (ஜூன் 25) வெளியிடப்படுகிறது என்றாா்.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அ... மேலும் பார்க்க