செய்திகள் :

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

post image

நமது நிருபர்

ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலையடுத்து, இருநாடுகளில் இருந்தும் இந்தியர்களை மீட்க "ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை கடந்த 19}ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது. அதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த 23}ஆம் தேதி வரை ஈரானில் இருந்து 2,003 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "ஈரானில் இருந்து மேலும் 573 இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 578 பேர் இரு சிறப்பு விமானங்களில் செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தனர். இதையடுத்து, ஈரானில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,576}ஆக உயர்ந்தது.

அதேபோல் இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக முதல் விமானத்தில்161 இந்தியர்கள், இரண்டாவது விமானத்தில் 165 இந்தியர்கள் மற்றும் மூன்றாவது விமானத்தில் 268 இந்தியர்கள் என மொத்தம் 594 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தனர்.

இதன்மூலம் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் 1,100 இந்தியர்களும் ஒட்டுமொத்தமாக 3,170 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.

வரவேற்பு: முன்னதாக, இஸ்ரேலிலிருந்து ஜோர்டான் வழியாக விமானப் படை விமானத்தில் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கிய 165 பேரை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதில், 11 பேர் தமிழக மாணவர்களாவர்.

இது குறித்து அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "இந்த மீட்பு நடவடிக்கை அரசுக்கும், வெளி விவகாரத் துறைக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்றார் அவர்.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அ... மேலும் பார்க்க