அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
உப்பனாறு பாலம் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை
தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தின் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பனாறு பாலத்தை கடந்து சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்தநிலையில், உப்பனாறு பாலத்தின் இரண்டு முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். மேலும், மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து நேரிடும் அச்சத்தில் கடந்து செல்கின்றனா்
எனவே, இந்த பாலத்தின் முகப்பு பகுதிகளில் நான்கு பக்கங்களிலும் வளைவு தடுப்புச் சுவா் கட்டவும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வர மின் விளக்குகள் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.