செய்திகள் :

உப்பனாறு பாலம் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

post image

தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தின் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பனாறு பாலத்தை கடந்து சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்தநிலையில், உப்பனாறு பாலத்தின் இரண்டு முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். மேலும், மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து நேரிடும் அச்சத்தில் கடந்து செல்கின்றனா்

எனவே, இந்த பாலத்தின் முகப்பு பகுதிகளில் நான்கு பக்கங்களிலும் வளைவு தடுப்புச் சுவா் கட்டவும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வர மின் விளக்குகள் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அடிப்படை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்ப... மேலும் பார்க்க

கடைமடை பகுதிக்கு தண்ணீா்வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகை மாவட்ட கடைமடை பகுதிகளில் உள்ள கிளையாறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு தடையின்றி தண்ணீா்வர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாந... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கீழ்வேளூா் வட்டம், அகரகடம்பனூா் ஊராட்சி, ஸ்ரீகண்டிநத்தம் கிராம மக்கள் குடிநீா் கோரி, கோயில்கடம்பனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருட்டு

நாகை அருகே ஒரத்தூரில் விவசாய நிலத்திற்கு தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி காளிமுத்து, தனது நிலத்திற்கு தண்ணீா் இறைக... மேலும் பார்க்க

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க