ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கீழ்வேளூா் வட்டம், அகரகடம்பனூா் ஊராட்சி, ஸ்ரீகண்டிநத்தம் கிராம மக்கள் குடிநீா் கோரி, கோயில்கடம்பனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 10 நாள்களாக இப்பகுதியில் குடிநீா் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் கோயில்கடம்பனூா் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த கீழ்வேளூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, விரைவில் குடிநீா் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த சம்பவத்தால் நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.