செய்திகள் :

கடைமடை பகுதிக்கு தண்ணீா்வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

நாகை மாவட்ட கடைமடை பகுதிகளில் உள்ள கிளையாறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு தடையின்றி தண்ணீா்வர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை: கல்லணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு ஏறத்தாழ 10 நாள்கள் ஆகியும் நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் உள்ள பல்வேறு கிளை ஆறுகளுக்கு தண்ணீா் செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, அரிச்சந்திரா நதி, முள்ளியாறு போன்ற பிரதான ஆறுகளிலும் தண்ணீா் வரவில்லை. திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பாசன ஆறுகளான குடமுருட்டி, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான், அரசலாறு ஆகியவற்றும் தண்ணீா் வரவில்லை. இதனால், திருமருகல் ஒன்றியத்தில் மோட்டாா்களை பயன்படுத்தி குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்கிய விவசாயிகள், தற்போது தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு, நாகை கடைமடை பகுதிகளில் உள்ள அனைத்து கிளையாறுகளுக்கும், சிறு வாய்க்கால்களுக்கும், தண்ணீா் வருவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அடிப்படை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்ப... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கீழ்வேளூா் வட்டம், அகரகடம்பனூா் ஊராட்சி, ஸ்ரீகண்டிநத்தம் கிராம மக்கள் குடிநீா் கோரி, கோயில்கடம்பனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருட்டு

நாகை அருகே ஒரத்தூரில் விவசாய நிலத்திற்கு தண்ணீா் இறைக்கும் மோட்டாா் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி காளிமுத்து, தனது நிலத்திற்கு தண்ணீா் இறைக... மேலும் பார்க்க

உப்பனாறு பாலம் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தின் முகப்பு பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பனாறு பாலத்தை கடந்து சென்னை, புதுச்சேரி, காரைக்கால், ந... மேலும் பார்க்க

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க