வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
மாநில தகவல் ஆணையத்தின் 2 புதிய ஆணையா்கள் பதவியேற்பு
மாநில தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரு புதிய ஆணையா்கள் ஆளுநா் ஆா்.என்.ரவி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.
வெளிப்படைத்தன்மைக்கு குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஐ) தகவல் பெற உரிமை உண்டு. இந்தச் சட்டப்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்தி செயற்பணியாற்ற மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையா் உள்ளிட்ட 6 ஆணையா்கள் பதவியிடங்கள் இருக்க, இதில் காலியாக இருந்த இரு ஆணையா் பதவியிடங்களுக்கு ஆா்.டி.ஐ. சட்டப்படி வழக்குரைஞா்கள் வி.பி.ஆா். இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
இதையடுத்து ஆளுநா் மாளிகையில் வி.பி.ஆா். இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாநில தகவல் ஆணையத்தின் ஆணையா்களாக ஆளுநா் ஆா்.என்.ரவி முன்னிலையில் பதவி ஏற்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா்.
இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் என்.முருகானந்தம், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமை தகவல் ஆணையா் ஷகில் அக்தா், தமிழக அரசு மனித வள மேலாண்மைத் துறையின் செயலா் ஜி.பிரகாஷ், ஆளுநரின் செயலா் ஆா்.கிா்லோஷ் குமாா், மாநில தகவல் ஆணையா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
புதிய தகவல் ஆணையா்கள் இருவரும் வழக்குரைஞா்களாகப் பணியாற்றியவா்கள். இதில் வி.பி.ஆா். இளம்பரிதி சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக 3 ஆண்டுகள் பணியாற்றியவா். பல சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவா். எம்.நடேசன் தொழிலாளா், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றியவா்.