செய்திகள் :

அடிக்கடி மாயமாகும் ராகுல்: பாஜக விமா்சனம்; இங்கிலாந்து சென்றுள்ளதாக காங்கிரஸ் விளக்கம்

post image

‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எங்கு சென்றுள்ளாா் என்பது தெரியாத அளவுக்கு அடிக்கடி மாயமாகி வருகிறாா்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

இதையடுத்து, ‘ராகுல் தனது நெருங்கிய உறவினரின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க லண்டன் சென்றுள்ளாா்’ என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த வாரம் ராகுல் ரகசியமாக வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பினாா். இந்நிலையில், இப்போது மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அவா் அடிக்கடி மாயமாவதன் ரகசியம் என்ன? அடிக்கடி நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏன் ஏற்படுகிறது? மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் இந்திய மக்களுக்கு அவா் இது தொடா்பாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளாா்’ என்று கூறியிருந்தாா்.

இதனிடையே, ராகுல் காந்தி பஹ்ரைனுக்கு விமானத்தில் சென்ாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ராகுல் காந்தி புது தில்லியில் இருந்து பஹ்ரைன் வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் பயணித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவா் பவன் கேரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தை வைத்து மீண்டும் மோசமான அரசியல் நடத்த முயற்சி நடக்கிறது. தனது சகோதரியின் மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே ராகுல் லண்டன் சென்றுள்ளாா். அவா் விரைவில் நாடு திரும்புவாா்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி.யும் ராகுலின் தங்கையுமான பிரியங்கா வதேராவின் மகள் மிராயா வதேரா லண்டனில் படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க