செய்திகள் :

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

post image

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.

அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ஆர்டர்களை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து இன்ஸ்பெக்டர் தீப்தி பிராமணேவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் முக்கிய கஃபேக்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ராஜபேத் காவல் நிலைய எல்லைக்குள் வரும் கஃபேக்களில் போலீசார் சோதனை நடத்தியபோது 'காபி ஷாப்' 'ரகசிய டேட்டிங் இடமாக' மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு காதல் ஜோடிகள் ஆபாச நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

rep image

இந்த கஃபேக்களுக்கு வரும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் சிறார்கள் இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தம்பதிகளும் அடங்கும். அவர்களுக்கு தனியுரிமை அறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு பிடிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், தம்பதிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களின் அடையாள அட்டைகள் சரிப்பார்க்கப்பட்டன. விசாரணைக்குப் பிறகு சிறுவர்கள் அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே அந்த பகுதியில் நடந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பல கஃபேக்கள் தற்போது தங்கள் அமைப்பை மாற்றி வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க

சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.சீனாவைச் சேர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.50,000 மதிப்புள்ள வாட்சை சர்வீஸ் கொடுத்த பெண் - இழுத்தடித்த நிறுவனத்திற்கு அபராதம்!

சென்னையைச் சேர்ந்த ஒருவர், வாட்ச் சர்வீஸ் கொடுத்த இடத்தில் திருப்பி தர தாமதமானதால் அதற்கு வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருக்கிறார்.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் அவரது குடும்ப உறுப்... மேலும் பார்க்க

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இ... மேலும் பார்க்க