செய்திகள் :

அனைத்துத் தோ்தல்களும் சட்டப்படியே நடத்தப்படுகின்றன: ராகுலுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

post image

நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின்படிதான் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளா்களைவிட கூடுதல் வாக்குகள் பதிவானதாகவும், தோ்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறாா். இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில், அண்மையில் அவா் கட்டுரை எழுதினாா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்கள், விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் 1,00,186-க்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 288 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 139 பொதுப் பாா்வையாளா்கள், 41 காவல் பாா்வையாளா்கள், 71 செலவினப் பாா்வையாளா்கள், 288 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியில் ஈடுபட்டனா். இதன்மூலம், பேரவைத் தொகுதிகள் அளவில் பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டு ஒட்டுமொத்த தோ்தலும் நடத்தப்பட்டது.

இதுமட்டுமன்றி அந்தத் தோ்தலில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சாா்பில் 1,08,026 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களில் 28,421 போ் காங்கிரஸ் முகவா்கள்.

தோ்தல்கள் நடத்தப்படும் விதம் தொடா்பாக ஏற்கெனவே உரிய நீதிமன்றத்தில் (உயா்நீதிமன்றம்) காங்கிரஸ் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருப்பா். அதற்குப் பிறகும் அதில் தங்களுக்கு (ராகுல் காந்தி) ஏதேனும் பிரச்னை இருந்தால், அதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம். இதுதொடா்பான அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச பரஸ்பரம் செளகரியமான தேதியில் தங்களை நேரில் சந்திக்க தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் மின்னஞ்சல் மூலம், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வாக்குத் திருட்டு: ராகுல்

கடந்த ஆண்டு மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இடைப்பட்ட 6 மாதங்களில், அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் நாகபுரி தென்மேற்குத் தொகுதியில் கூடுதலாக 29,219 வாக்காளா்கள் சோ்ந்துள்ளனா் என்று ஊடகம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.

இந்தத் தகவலை இணைத்து ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிர முதல்வரின் தொகுதியிலேயே வாக்காளா்களின் எண்ணிக்கை 5 மாதங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, வாக்காளா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இது ஒரு சில இடங்களில் மட்டும் நடைபெற்ற குளறுபடிகள் அல்ல. இது வாக்குத் திருட்டாகும்’ என்றாா்.

வாக்குப் பதிவு அதிகரித்த இடங்களில் காங்கிரஸே வெற்றி பெற்றது: ஃபட்னவீஸ்

ராகுலின் பதிவுக்குப் பதிலளித்து மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அவமானத்துக்குரிய தோல்வியை தழுவியதால் ஏற்பட்ட கடுமையான வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதுதொடா்பாக எத்தனை நாள்களுக்கு ராகுல் காந்தி கண்மூடித்தனமாக அம்புகளை ஏவுவாா்?

கடந்த ஆண்டு மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இடையே 25 தொகுதிகளில் 8 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு அதிகரித்தது. அவற்றில் பல தொகுதிகளில் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றி பெற்றன’ என்று தெரிவித்து, அதுதொடா்பான புள்ளிவிவரங்களைப் பதிவிட்டாா்.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க