செய்திகள் :

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறிப்பிட்டு இருந்தார். வேட்பாளர்களின் சொத்து மற்றும் அவர்களின் மனைவிகளின் சொத்து விபரங்களை வேட்பு மனுவில் கேட்டு இருந்தனர். அதில் இரண்டாவது மனைவி என்ற இடத்தில் ராஜேந்திர காவிட் தனது இரண்டாவது மனைவியின் பெயரை குறிப்பிட்டு அவர் பெயரில் இருக்கும் சொத்து விபரங்களை குறிப்பிட்டு இருந்தார்.

அவர் தனக்கு இரண்டு மனைவி இருப்பதை வெளிப்படையாக தெரிவித்து இருப்பதை சுட்டிக்காட்டி அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் சுதிர் ஜெயின் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ராஜேந்திர காவிட்

இம்மனு விசாரணைக்கு வந்தபோது சுதிர் ஜெயின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதா கார்னிக், ''இந்து திருமண சட்டத்தின் படி முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது. எனவே ராஜேந்திர காவிட்டின் இரண்டாவது மனைவி ரூபாலி சட்டப்பூர்வமானவர் கிடையாது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 100வது பிரிவின் கீழ் ராஜேந்திர காவிட் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ராஜேந்திரா காவிட் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிதின், '' தனது மனுதாரர் ராஜேந்திர காவிட் நேர்மையான முறையில் தனது இரண்டாவது திருமணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதோடு ராஜேந்திர காவிட் சார்ந்துள்ள சமுதாயம் பலதார திருமணத்தை அங்கீகரிக்கிறது'' என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சந்தீப், ''தேர்தல் வேட்புமனுவில் மனைவி எண் 2 பகுதியில் வருமானம் மற்றும் சொத்து தொடர்பான விபரங்களை சேர்ப்பது சட்டத்திற்கு எதிரானது கிடையாது. ராஜேந்திர காவிட் தேர்தல் பிரமாண பத்திரத்தில் உண்மையை தெரிவித்து இருக்கிறாரா என்பதுதான் பிரச்னை. தேர்தல் பிரமாண பத்திரத்தின் 26வது விண்ணப்பத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 100வது பிரிவின் கீழ் தவறான தகவல் கொடுத்தால் தேர்தல் வெற்றி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதே பத்திரத்தில் மனைவி எண் 2 என்ற பிரிவை சேர்த்து அவரின் சொத்து மற்றும் வருமான வரி விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது முரணாக இருக்கிறது. எனவே ராஜேந்திர காவிட் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியாது''என்று நீதிபதி தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Lumpsum: உங்க பேங்க் பேலன்ஸ் கூறும் பொய்... லம்ப்சம் முதலீடு பற்றித் தெரியாத அந்த விஷயம்...

நீங்க 10, 15, 25 வருஷம் உழைச்சாச்சு. பார்த்து பார்த்து பேங்குலசில லட்சங்கள் பணமும் சேர்த்தாச்சு. ரொம்ப நிம்மதியா இருக்குல்ல? நாம நினைக்குற நேரத்துல நம்மளைக் காப்பாத்தக்கூடியபணத்தை சேர்த்துட்டதா நினைக்... மேலும் பார்க்க

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க

சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.சீனாவைச் சேர... மேலும் பார்க்க