செய்திகள் :

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

post image

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 1,685 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,474 ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று (ஜூன் 25) தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடு திரும்பிய ஆப்கன் மக்கள் அனைவரும் தொர்காம் எல்லை, ஸ்பின் பொல்தாக், இஸ்லாம் காலா மற்றும் புல்-இ-அப்ரெஷாம் ஆகிய எல்லைகள் வழியாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களுக்குள் குடியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம் காலா எல்லை வழியாக மட்டும் நாளொன்றுக்கு சுமார் 8,000 முதல் 10,000 ஆப்கன் மக்கள் தாயகம் வந்தடைவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாடு திரும்பும் மக்களுக்கு, தற்காலிக கூடாரங்கள், உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றை அந்நாட்டு அரசு வழங்கி வருகின்றது.

முன்னதாக, பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளில் மட்டும் சுமார் 70 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தங்களது நாட்டிலிருந்து வெளியேறுமாறு இருநாடுகளின் அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.

மேலும், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள குடிமக்கள் தாயகம் திரும்புமாறு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்... மேலும் பார்க்க

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடை... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார்.இவர், சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய இந்திய - அமெரிக்... மேலும் பார்க்க

இஸ்ரேல் உளவாளி மூவருக்கு ஈரானில் மரண தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது... மேலும் பார்க்க