செய்திகள் :

இஸ்ரேல் உளவாளி மூவருக்கு ஈரானில் மரண தண்டனை!

post image

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்த நிலையில் ஈரானின் ஃபேர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.

இந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் வடமேற்கு மாகாணமான ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் இன்று (ஜூன்25) மூவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டிற்குள் கொலை உபகரணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலுடனான போரின்போது ஈரான் பலருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது. போர் முடிவுக்கு வந்தபிறகும் மரண தண்டனைகள் நிறைவேற்றக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிலிடப்பட்ட மூவர், ஆசாத் ஷோஜாய், எட்ரிஸ் ஆலி மற்றும் ரசூல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை ஜூன் 16 முதல் போரை உளவு பார்த்ததற்காகத் தூக்கிலிடப்பட்டனர். இன்றுடன் சேர்த்து இதுவரை மொத்த ஆறு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார்.இவர், சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய இந்திய - அமெரிக்... மேலும் பார்க்க

விண்வெளிக்குச் செல்வதற்கு முன் சுபான்ஷு தனது தாயிடம் என்ன சொன்னார் தெரியுமா?

‘ஆக்ஸிம் - 4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, புறப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.அமெரிக்காவில் செயல்படும் மனித விண... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்

ஈரான் அணு ஆயுத தளத்தை அமெரிக்கா அழிக்கவில்லை என உளவுத்துறைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய கிழக்கில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப... மேலும் பார்க்க

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை! - மாற்றி பேசும் டிரம்ப்

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்துக்குப் பின்னர், ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நா... மேலும் பார்க்க

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் வெற்றி யாருக்கு?

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக்கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஈரானும், இரு நாடுகளையும் சேர்த்து அமெ... மேலும் பார்க்க