செய்திகள் :

இன்னமும் கடினமாக உழைக்கும் அம்மா அப்பா! - மகனின் மடல் #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எனது அன்பு அப்பாவுக்கும் அம்மாவுக்கும்,

நான் இங்கு நலம்; நீங்கள் அங்கு நலம் என்று தெரியும். இருந்தும், எனது இந்தத் தருணத்தை இங்கேயே உணர்ந்து பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு வாய்ப்பு கொடுத்த விகடனுக்கு நன்றி. எனக்கு இயல்பாகவே சற்று தன்னம்பிக்கை அதிகம். என் பெற்றோர் விஷயத்திலும் அப்படிதான் இருந்தேன். அது இப்போது உண்மை இல்லை என்று தோன்றுகிறது.

நான் தந்தை ஆகி 5 மாதங்களில் என் மகளையும் மனைவியையும் இந்தியா அனுப்பிவிட்டுப் பிரிந்து இருக்கிறேன். இந்த 3 மாதம் உணர்த்திய பல விஷயங்களில் இதுவும் ஒன்று. நான் அவர்களை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறேன் என்று நான் வைத்திருந்த நம்பிக்கை உடைந்தது. நான் மாதம் மாதம் அனுப்பும் பணம் அவர்களைப் பார்த்துக் கொள்ளாது.

வீடுகளில் இளைய பிள்ளைதான் செல்லம் மற்றும் அவர் வேண்டியது எல்லாம் கிடைக்கும் பெரும்பாலும். இந்த விஷயத்தில் நான் மாறுபடுவேன். ஏனெனில் நான் 10 வருடம் கழித்துப் பிறந்த குழந்தை. நான் தான் செல்லப் பிள்ளை. இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் என்னைக் கண்டித்தே வளர்த்தனர். வேறு வேறு மாதிரியான கண்டிப்புகள். அப்பா அடித்தால் நான் கோபித்துக் கொள்வேன். அம்மா அடித்தால் அழுது விடுவேன்.

அப்பா எதற்கும் 'இல்லை' என்று சொன்னது இல்லை. அம்மா 'நாம் எதையும் கஷ்டப்பட்டால் கிடைக்கும்' என்று சொல்வார். அம்மாவின் பாசத்தில் கண்டிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். அப்பா பாசத்தில் சற்று அதிக சுதந்திரம் இருக்கும். இருவருமே எனக்கு வாழ்க்கையை இரு வேறு விதமாகக் கற்றுக் கொடுத்தார்கள்.

அம்மா தற்போது இடைநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் - சமையல் பொறுப்பில் இருக்கிறார். இந்த வேலையைப் பெறுவதற்காக, அவர் சுமார் 3 வருடங்கள் வெறும் சாப்பாட்டிற்காக மட்டும் அந்த வேலையைச் செய்தார். அந்தப் பொறுப்பில் இருந்த பாட்டி ஓய்வுபெறப் போகும் கடைசி காலத்தில் சற்றுத் தளர்ந்ததால், அவருக்குப் பதிலாக அம்மா அந்த வேலையைச் செய்தார்.

அத்துடன் வீட்டு வேலைகளையும் செய்துவந்தார். பின்னர் அந்தப் பாட்டி ஓய்வு பெற்றதும், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு தலைமை அமைப்பாளர் ஆகிய பலரின் பரிந்துரையின் பேரில் அந்த வேலை அம்மாவுக்குக் கிடைத்தது. அம்மா எப்போதும் சொல்வார்கள், "கஷ்டப்பட்டால்தான் கிடைக்கும்" என்று.

அப்பா வேறு ஊரில் இருந்து வந்து இன்னும் கஷ்டப்பட்டு தினசரி வேலை பார்க்கிறார். அவர் எங்களைப் படிக்க வைக்க, இடம் வாங்க, வீடு கட்ட, ஆடைகள் எடுக்க, எனக்கும் தம்பிக்கும் கஷ்டம் என்னவென்று தெரியாத அளவுக்குப் பார்த்துக் கொள்வார். அப்பா வாரம் வாரம் சம்பளம் வரும் போதெல்லாம் ஒரு சோன்பப்டி டப்பா, ஒரு கை முறுக்கு டப்பா வாங்கிட்டு வருவாங்க. அதான் சுவை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அம்மா வீட்டில் எல்லோரும் எல்லா வேளையிலும் சாப்பிட்டார்களா என்று உறுதி செய்வார்கள்.

இது எல்லாத்துக்கும் மேல ரெண்டு பேரும் எப்போதும் நிதி சுதந்திரத்தை பராமரிப்பார்கள். ஒன்றாகச் செலவு செய்யும் சூழ்நிலை வரும்போதுதான் இவர் கிட்ட எவ்வளவு காசு இருக்கு, அதைவிட முக்கியமாக அம்மா கிட்ட எவ்வளவு காசு இருக்கும் என்று தெரியும்.

நான் காதல் திருமணம் செய்தவன். என் அம்மாவேதான் முதன்முதலில் சம்மதம் தெரிவித்தாள். அம்மா எதுவும் கேட்காமல், "சரி, இருவருக்கும் பிடித்திருந்தால் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்றார். கோவிட் காலம் என்பதாலும், பின்னர் செலவையும் குறைக்கலாம் என்பதாலும் அவர் அப்படிச் சொன்னார்.

அப்பா இதை ஏற்றுக்கொள்வார் என நான் நினைக்கவில்லை. தான் எனக்குக் கொடுத்த சுதந்திரத்தால் நான் சொன்னால் என் பையன் கேட்பான் என்று அவர் நினைத்திருந்தார். நான் பிறகு அவருக்குச் சொல்லிப் புரியவைத்தேன், அவரும் ஏற்றுக்கொண்டார். அது அவ்வளவு எளிதாக நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அப்பா உறவினர்களுடன் நெருக்கமாக இருந்து உறவுகளைப் பராமரிக்க விரும்புவார். ஆனால் அம்மா சற்று ஒதுங்கியே இருப்பார். நான் இந்த இரண்டிற்கும் நடுவில் இருக்கப் பழகிக்கொண்டேன்.

இப்போது உங்களைப் பற்றி நினைத்தது எல்லாமே சொல்ல முடியவில்லை. மேலோட்டமாக தான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு நிறைய பண்ணி இருக்கிறீர்கள். இன்னும் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் இப்போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியூரில் இருந்து அங்க வந்து கூட இருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப மிஸ் பண்றேன். தவறு பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். எல்லாம் சீக்கிரம் சரி பண்ணுவேன். சீக்கிரம் வந்து பார்க்கிறேன் உங்களை.

என்றும் அன்புடன்,

சங்கர்

Letter Contest

கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தந்தையின் வலி! - மகளுக்கு ஒரு மடல் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசனும் அப்பா! - மகனின் அன்பு வேண்டுகோள் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சேற்று வரப்பை முத்தமிட்ட உங்கள் பாதத்திற்கு ஓய்வு கொடுக்க முடியலை - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தண்டனை தராமல் திருத்தும் புதுமை ஆசான் நீங்கள்! - அப்பாவிற்கு மகளின் பரிசு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விறகு வாங்க வைத்திருந்த ரூபாயை எடுத்து என் அழுகையை அணைப்பாயே அம்மா! - மகனின் மன்னிப்பு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எல்லாரும் உன்ன தப்பானவன்னு சொல்லி என்ன வளர்த்துட்டாங்கம்மா! - மகனின் மன்னிப்பு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க