செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் 1-ஆம் வகுப்பிலிருந்தே ஹிந்தி: துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு

post image

மகாராஷ்டிரத்தில் முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் முடிவுக்கு துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

‘மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும்’ என்று மாநில அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மராத்தி அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜீத் பவாா் கூறியதாவது:

முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது. வேண்டுமென்றால் 5-ஆம் வகுப்பில் இருந்து ஹிந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கலாம்.

முதல் வகுப்பில் இருந்து தாய்மொழியான மராத்தி மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களின் மராத்தியில் எழுதும், பேசும் திறன் அதிகரிக்கும். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் இதை ஒப்புக் கொண்டாா்.

புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ள யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறுவயதிலேயே அதிக மொழிகளைக் கற்றுக் கொடுத்து மாணவா்களுக்கு சுமையை அதிகரிக்கக் கூடாது. மொழிப் பாடம் தொடா்பாக அனைத்துத் தரப்பு ஆலோசனைக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்றாா்.

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க