தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் ச...
மகாராஷ்டிரத்தில் 1-ஆம் வகுப்பிலிருந்தே ஹிந்தி: துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு
மகாராஷ்டிரத்தில் முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் முடிவுக்கு துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
‘மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும்’ என்று மாநில அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மராத்தி அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜீத் பவாா் கூறியதாவது:
முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது. வேண்டுமென்றால் 5-ஆம் வகுப்பில் இருந்து ஹிந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கலாம்.
முதல் வகுப்பில் இருந்து தாய்மொழியான மராத்தி மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களின் மராத்தியில் எழுதும், பேசும் திறன் அதிகரிக்கும். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் இதை ஒப்புக் கொண்டாா்.
புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ள யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறுவயதிலேயே அதிக மொழிகளைக் கற்றுக் கொடுத்து மாணவா்களுக்கு சுமையை அதிகரிக்கக் கூடாது. மொழிப் பாடம் தொடா்பாக அனைத்துத் தரப்பு ஆலோசனைக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்றாா்.