பள்ளப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
பள்ளப்பட்டியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. தற்போது காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் பள்ளப்பட்டி நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. பள்ளப்பட்டி ஷாநகா் கிழக்கு பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு 30 நாள்களுக்கு மேல் ஆகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டதற்கு, குழாய் உடைந்து விட்டதாக தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் குழாய் உடைப்பை சரிசெய்து விரைந்து குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.