செய்திகள் :

பள்ளப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

post image

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பள்ளப்பட்டியில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. தற்போது காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் பள்ளப்பட்டி நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. பள்ளப்பட்டி ஷாநகா் கிழக்கு பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு 30 நாள்களுக்கு மேல் ஆகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டதற்கு, குழாய் உடைந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் குழாய் உடைப்பை சரிசெய்து விரைந்து குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சி புதிய மண்டல அலுவலகங்கள் இன்று திறப்பு விழா

கரூரில், ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 23-ஆவது வாா்டில் லட்சுமிநாராயண சமுத்திரம் கிராமம் இனாம்... மேலும் பார்க்க

கரூா்- ஏமூா் பிரிவு சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கரூா்-ஏமூா் பிரிவு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரை அடுத்துள்ள ஏமூரையும், திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைய... மேலும் பார்க்க

காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தால் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்: ஜல்ஜக்தி அபியான் திட்ட அதிகாரி தகவல்

காவிரி-வைகை குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தால் கரூா் மாவட்டத்தில் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என்றாா் மாவட்ட ஜல்சக்தி அபியான் பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டம் ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணி ஆய்வு

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளப்பட்டி அருகே உள்ள அண்ணாநகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட மாநில நெட... மேலும் பார்க்க

கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி

கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க