செய்திகள் :

நடிகர் கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை! வீட்டில் சோதனை!

post image

போதைப் பொருள் வழக்கில் நடிகா் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் 16 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினா்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடனான கிருஷ்ணாவின் உரையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவில் வீட்டில் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விச... மேலும் பார்க்க

தி ஹண்ட் - ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடரின் தமிழ் டிரைலர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின்... மேலும் பார்க்க

3 பிஎச்கே டிரைலர்!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் ... மேலும் பார்க்க

லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் சூரி?

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாமன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூரி மண்டாடி என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் மீனவர்களின் வாழ்வ... மேலும் பார்க்க

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! ஆடியோ வெளியிட்டு உருக்கம்!

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி செய்த சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் கமல், ரஜினி, வி... மேலும் பார்க்க

சென்னையில் நாளை தொடங்கும் மாநில குத்துச்சண்டை போட்டி

மாநில அளவிலான ‘ஆதித்த கரிகாலன் கோப்பை’ குத்துச்சண்டை போட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. கோபாலபுரத்தில் உள்ள கலைஞா் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமியில் நடைபெறவு... மேலும் பார்க்க