செய்திகள் :

``Urine Eye Wash'' - வைரலாகும் பெண்ணின் பதிவு; ``கொடூரமானது'' - எச்சரிக்கும் மருத்துவர்

post image

புனேயை சேர்ந்த நுபுர் என்ற பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் `Urine Eye Wash — Nature’s Own Medicine' என்று தலைப்பிட்டு, "தினமும் காலையில் எனது ப்ரஸ்ஸான சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறேன். மருந்து இல்லாமல் வாழ்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் இப்பதிவை ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால் அவரின் பதிவை பார்த்து நெட்டிசன்கள் அப்பெண்ணை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இது போன்ற செயல்களால் கண்ணில் தொற்று மற்றும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரபல கண் மருத்துவர் அபய் பிலிப்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள பதிலில், ''தயவு செய்து கண்ணில் சிறுநீரை விடாதீர்கள். அதனால் எந்த வித பயனும் கிடையாது. அவரின் செயல் கொடூரமானது. நீங்கள் சமூக ஊடகங்களில் பிரபலம் அடையவேண்டும் என்றால், அதற்கு இது வழி அல்ல,'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் சென்று தனது ஆலோசனையை டாக்டர் வழங்கி இருக்கிறார்.

"இந்த செயல் அருவருக்கத்தக்கது, மனித சிறுநீரில் 90% தண்ணீரும், எஞ்சிய பகுதி யூரியா, அமோனியா, உப்பு போன்றவை இருக்கும்" என்று கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், உடனடியாக மருத்துவரை சந்திக்கும்படி அப்பெண்ணிற்கு அறிவுரை கூறியுள்ளனர்.

Reliance: ``என் தந்தை என்னிடம் சொன்னதுதான் என் லட்சியம்" - மனம் திறந்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிறுவனர்களுக்குப் பிறகும் இருப்பதை உறுதி செய்வதே என் மிகப்பெரிய லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்த பின்னர் பசு மாடு இறந்த... மேலும் பார்க்க

``விருதுநகரே விடைபெறுகிறேன்!'' - ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய உருக்கமான கடிதம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர். வீ.ப.ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட மக... மேலும் பார்க்க

Spain: `உலகிலேயே பெரிய உதடு' - உலக சாதனைக்காக இளம்பெண் செய்த வேலை.. செலவு எவ்வளவு தெரியுமா?

ஸ்பெயினின் மஜோர்காவைச் சேர்ந்த வியன்னா என்ற பெண் உதட்டு சிகிச்சைக்காக £37,000 (கிட்டதட்ட இந்திய மதிப்பில் 39 லட்சம் ரூபாய்) செலவழித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய உதட்டை பெறவேண்டும், என்பதற்காக இந்த அற... மேலும் பார்க்க

``நீ இல்லையெனில் சாத்தியமில்லை..'' - விண்வெளி பயணத்திற்கு முன் மனைவிக்கு நன்றி சொன்ன சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீ... மேலும் பார்க்க

லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் 11 பேருக்கு தலைசுற்றல், குமட்டல்.. என்ன காரணம்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர். அதோடு ஏர் இந்தியா விமானத்திற்கான டிக்கெட் முன்பத... மேலும் பார்க்க