செய்திகள் :

``விருதுநகரே விடைபெறுகிறேன்!'' - ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய உருக்கமான கடிதம்!

post image

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர். வீ.ப.ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட மக்களுக்கு அவர் கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

முனைவர் வீ.ப. ஜெயசீலன்

அந்தக் கடிதத்தில், ”கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப் பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.

நன்றி கடிதம்

விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்னும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவர்கள், சார்நிலைப் பணியாளர்கள், நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன்.

விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணிக்காலத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

அன்புடன், நன்றியுடன் எனக்கூறி கையொப்பமிட்டு இருக்கிறார்.

முனைவர். வீ.ப. ஜெயசீலன்

இரண்டரை ஆண்டுகளாக மாவட்டத்தின் மக்கள் மீது ஆட்சியர் ஜெயசீலன் காட்டிய அக்கறையும், மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலுக்கும் உதவிய விதம் ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட மக்கள், இவரின் பிரியாவிடை கடிதத்தை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Reliance: ``என் தந்தை என்னிடம் சொன்னதுதான் என் லட்சியம்" - மனம் திறந்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிறுவனர்களுக்குப் பிறகும் இருப்பதை உறுதி செய்வதே என் மிகப்பெரிய லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்த பின்னர் பசு மாடு இறந்த... மேலும் பார்க்க

``Urine Eye Wash'' - வைரலாகும் பெண்ணின் பதிவு; ``கொடூரமானது'' - எச்சரிக்கும் மருத்துவர்

புனேயை சேர்ந்த நுபுர் என்ற பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் `Urine Eye Wash — Nature’s Own Med... மேலும் பார்க்க

Spain: `உலகிலேயே பெரிய உதடு' - உலக சாதனைக்காக இளம்பெண் செய்த வேலை.. செலவு எவ்வளவு தெரியுமா?

ஸ்பெயினின் மஜோர்காவைச் சேர்ந்த வியன்னா என்ற பெண் உதட்டு சிகிச்சைக்காக £37,000 (கிட்டதட்ட இந்திய மதிப்பில் 39 லட்சம் ரூபாய்) செலவழித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய உதட்டை பெறவேண்டும், என்பதற்காக இந்த அற... மேலும் பார்க்க

``நீ இல்லையெனில் சாத்தியமில்லை..'' - விண்வெளி பயணத்திற்கு முன் மனைவிக்கு நன்றி சொன்ன சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீ... மேலும் பார்க்க

லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் 11 பேருக்கு தலைசுற்றல், குமட்டல்.. என்ன காரணம்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர். அதோடு ஏர் இந்தியா விமானத்திற்கான டிக்கெட் முன்பத... மேலும் பார்க்க