”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் ...
``விருதுநகரே விடைபெறுகிறேன்!'' - ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய உருக்கமான கடிதம்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர். வீ.ப.ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட மக்களுக்கு அவர் கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ”கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப் பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்னும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவர்கள், சார்நிலைப் பணியாளர்கள், நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன்.
விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணிக்காலத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புடன், நன்றியுடன் எனக்கூறி கையொப்பமிட்டு இருக்கிறார்.

இரண்டரை ஆண்டுகளாக மாவட்டத்தின் மக்கள் மீது ஆட்சியர் ஜெயசீலன் காட்டிய அக்கறையும், மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலுக்கும் உதவிய விதம் ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட மக்கள், இவரின் பிரியாவிடை கடிதத்தை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.