செய்திகள் :

லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் 11 பேருக்கு தலைசுற்றல், குமட்டல்.. என்ன காரணம்?

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர். அதோடு ஏர் இந்தியா விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவும் வெகுவாக சரிந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிர்வாகம் பல வெளிநாட்டு சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்து இருக்கிறது.

மும்பை விமான நிலையம்

தற்போது லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தலைசுற்றல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. பயணிகள் சாப்பிட்ட பிறகு இது போன்ற பிரச்னை ஏற்பட்டது. பயணிகள் மட்டுமல்லாது விமான சிப்பந்திகளுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டது. 5 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் இது போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். விமானத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.

அப்படி ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் விமானத்தில் தானாகவே மேல் பகுதியில் இருந்து ஆக்ஸிஜன் முககவசம் வரும். ஆனால் ஏர் இந்தியா விமானத்தில் அது போன்று ஆக்ஸிஜன் முககவசம் வரவில்லை. எனவே ஆக்ஸிஜன் குறைபாடு இல்லை என்று தெரிய வந்தது.

விமான பயணத்தின் பல்வேறு காலக்கட்டத்தில் 5 பயணிகளுக்கு தலைசுற்றல் மற்றும் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை இரண்டு பயணிகள் மற்றும் இரு விமான சிப்பந்திகளுக்கு இது போன்ற பிரச்னை இருந்து கொண்டே இருந்தது. விமான தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக நின்ற மருத்துவ குழு அவர்களுக்கு தேவையான சிகிச்சையை கொடுத்தது.

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானத்தில் பயணிக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியம் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு காரணமாக இந்நிகழ்வு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடுதான் பைலட்களுக்கும் வழங்கப்பட்டது. பைலட்களுக்கு எந்த வித பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்திய விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பை: ``நிறுத்துங்க, நான் ஏறணும்..'' - விமானத்தை நோக்கி ஓடிய பயணி, சுற்றி வளைத்த அதிகாரிகள்

விமான பயணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும் என்று சொல்வார்கள். பஸ், ரயில் போன்று விமான பயணத்திற்கு தாமதமாக செல்ல முடியாது. ஒருமுறை கேட் மூடப்பட்டுவிட்டால் அதன் பிறகு விமானத்தில் பயணிக... மேலும் பார்க்க

``அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' - பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அ... மேலும் பார்க்க

Samantha: ``ஐயோ, மீண்டும் வந்துவிட்டதா?" - வைரலான மார்க் சீட்; சமந்தாவின் `கியூட்' ரியாக்ஷன்!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரம் சமந்தா பள்ளி காலத்தில் பெற்ற பாராட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப சிக்க... மேலும் பார்க்க

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்ற... மேலும் பார்க்க

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க