"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" - பாடகி செளந்தர்யா பேட்டி
Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" - மெட்டி ஒலி காயத்ரி
சமீபத்தில் நடிகை காயத்ரியையும் அவரது சகோதரர் சஞ்சய் பார்கவையும் பேட்டிக்காக நம் அலுவலகத்தில் சந்தித்தோம்.
காயத்ரி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இலக்கியா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சஞ்சய் `மனசந்த நூவே ( Manasantha Nuvve) எனும் தெலுங்கு டிவி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர்களிடம் பேசினோம்.
"இப்ப வரைக்கும் என்ன பண்ணாலும் என்னை `சரோ'வாகத்தான் பார்க்கிறாங்க. படங்களில் எனக்கு கம்ஃபர்டபுளாக இல்ல. நான் நடிச்ச படங்கள் எல்லாமே நல்ல அனுபவங்களைத்தான் கொடுத்திருக்கு. ஆனாலும், எனக்கு ஏனோ அதன் மேல ஈடுபாடு இல்ல.
எந்த டைம் நான் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்னு கூடத் தெரியல. `கொலையுதிர் காலம்' என் முதல் சீரியல். அப்போதிலிருந்து இப்ப வரைக்குமே நான் ப்ராம்ப்டிங் எடுக்க மாட்டேன். திருமுருகன் சார் செட்ல அவ்ளோ அமைதியா இருப்போம்.
ராஜம் கேரக்டருக்கு மெட்டி ஒலியில் ப்ராம்ப்டிங் எடுத்ததுக்கான காரணமே அந்த மாடுலேஷன்தான். ஏன்னா, சாந்தி வில்லியம்ஸ் மேம் ரொம்ப சைலண்ட் ஆன கேரக்டர். அதுக்காக மட்டும்தான் ப்ராம்ப்ட் பண்ணோம்.
மத்த எல்லா கேரக்டருக்கும் ப்ராம்ப்டிங் கிடையாது. அப்படி ட்ரெயின் ஆகி வந்துட்டோம் அதை மாத்திக்க முடியல. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியாக இருந்தாலும் இதைத்தான் ஃபாலோ பண்றேன்!" என்ற காயத்ரியைத் தொடர்ந்து பேசிய சஞ்சய்,
"தமிழ், மலையாளம், இந்தி, மராட்டி, தெலுங்கு, இங்கிலீஷ்னு எல்லாமே எங்களுக்குத் தெரியும். எனக்கும் சரி, காயத்ரிக்கும் சரி தமிழ் படிக்கிறதுக்குக் கஷ்டமா இல்ல. நான் தமிழ் மாஸ்டரெல்லாம் வச்சு கத்துக்கிட்டேன்.
இனி நான் தமிழில் பெரிய ஸ்டார் ஆகப் போறேன்னு நினைச்சு அதெல்லாம் கத்துக்கிட்டேன்" என்றவரின் பேச்சில் அவ்வளவு நிதானம்.
`மெட்டி ஒலி' நினைவுகள் குறித்துக் கேட்கவும், "இப்ப வரைக்கும் போஸ் வெங்கட் எங்களுக்கு மாம்ஸ்தான். எல்லாரும் ரொம்ப எதார்த்தமா இருந்தாங்க. `மெட்டி ஒலி' தொடரில் 50% வெற்றிக்கான காரணம் சரியான காஸ்டிங் தேர்வு தான்.
திருமுருகன் சார் எங்களை அப்படி நடிக்க வச்சார். அப்பப்ப `சரோ' கதாபாத்திரத்திற்குள் `காயத்ரி'யாக வரும் போது தலையில் தட்டி காயத்ரியை அனுப்புறது முருகன் சார் தான்! 5 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல!

இப்ப கூட நான் மார்டன் டிரஸ் போட்டா, `இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க. ஏங்க நான் ப்ரொமோட் ஆகி இப்ப நானே மாமியார் ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு பதில் சொல்லுவேன்.
அதெல்லாம் காமெடியாகத்தான் இருக்கும். எங்க சிஸ்டர்ஸுக்குள்ள நல்ல பாண்டிங் இருந்தது. என் அண்ணனுக்கும் என் அக்காவுக்கும் சண்டை வரும். நான் கடைக்குட்டின்னு என் மேல அக்கா, அண்ணன் செல்லமா இருப்பாங்க.
அதே மாதிரி நாங்க ரேவதியைக் கடைக்குட்டின்னுதான் பார்ப்போம். நான், வனஜா, உமா, காவேரியெல்லாம் அப்படி சண்டை போட்டிருக்கோம். பிறகு நாங்களே சமாதனமும் ஆகிடுவோம்.
உமாவோட இழப்புல இருந்து இப்பதான் ஓரளவு வெளியில வந்து அது குறித்துப் பேசுறோம். அவங்க ஃபேமிலியும் இப்ப தான் அதுல இருந்து வெளியில வந்திருக்காங்க" என்றவரிடம் `மெட்டி ஒலி 2' குறித்துக் கேட்டோம்.
"நாங்களும் கேட்டுட்டுதான் இருக்கோம். ஆனா, நாங்க எல்லாரும் இருக்கணும்னு விரும்புறோம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயங்களில் பிஸியா இருக்காங்க. எல்லாரும் இருந்தா நல்லா இருக்கும். நாங்களும் பேசிட்டிருக்கோம்... பார்க்கலாம்" எனப் புன்னகைகவும் சஞ்சய் பேச ஆரம்பித்தார்.

"ராதிகா மேம், ரேவதி மேம், தேவயாணி மேம் மாதிரியான கெப்பாசிட்டி காயத்ரிக்கு இருக்கு. ஆனா, ஏன் அவங்களுக்கு அந்த மாதிரியான கேரக்டர் சினிமாவில் கிடைக்க மாட்டேங்குதுங்கிற கேள்வி எனக்குள்ள இருக்கு. நடிகரா நான் இதை கேட்கல.. ஃபேமிலி மெம்பர் ஆக எனக்கு இருக்கு" என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து இருவரும் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...