செய்திகள் :

"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" - பாடகி செளந்தர்யா பேட்டி

post image

“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் பண்ணி, சோஷியல் மீடியாவில் பாராட்டிக்கிட்டிருக்கிற ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!” உற்சாக மழையில் நனைந்தபடி பேசுகிறார், பாடகி செளந்தர்யா.

`முத்த மழை' பாடலை சின்மயி மேடையில் பாடி, உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்க, உடன் பாடிய செளந்தர்யாவையும் பாராட்டிக்கொண்டிருக்கும் சூழலில் அவரிடம் வாழ்த்துகள் சொல்லி பேசினேன்...

‘முத்தமழை...’ வாய்ப்பு எப்படி அமைந்தது?”

“ராஞ்சனா படத்திலிருந்து ரஹ்மான் சார் மியூசிக்குல பாடிக்கிட்டிருக்கேன். அவரோட மியூசிக்ல இந்தியில் ’கலா ரசிகா’ தான் என்னோட முதல் கோரஸ். சூப்பர் சிங்கர் பாடி முடிச்சிருந்த நேரத்துல ரஹ்மான் சார் ஆஃபிசிலிருந்து அழைப்பு வந்தது. அதிலிருந்து, இப்போவரைக்கும் ரஹ்மான் சார் மியூசிக்ல பாடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படித்தான், ‘முத்த மழை...’ கோரஸ் பாடுற வாய்ப்பு அமைஞ்சது.

முதலில், பாடகி தீ வெர்ஷன்லதான் பாட்டு ரெக்கார்டு பண்ணினாங்க. அந்த வெர்ஷனைத்தான் கேட்டிருந்தோம். அதே பாடலை சின்மயி அக்கா மேடையில பாடுறதுக்கு முன்னாடி ரிகசல் பண்ணினாங்க. முதன் முறையா அவங்களோட வெர்ஷன்ல அந்த பாட்டை கேட்கும்போது, ‘வாவ்... ரொம்ப அழகா பாடுறாங்களே’ன்னு நினைச்சேன்.

பாடகி செளந்தர்யா

அடுத்ததா, ஸ்டேஜ்ல பாடும்போது இந்த பாட்டு என்னவோ பண்ணப் போகுதுன்னு புரிஞ்சிடுச்சு. நாங்க, நினைச்சதைவிட என்னன்னவோ பண்ணிடுச்சு. இதுக்கு, முன்னாடி எத்தனையோ ஆடியோ லாஞ்ச்ல கோரஸ் பாடியிருக்கோம்.

ஆனா, இந்த பாட்டைப் பாடும்போதுதான் எங்களையும் கண்டுபிடிச்சு வைரல் பண்ணிட்டாங்க. குறிப்பா, என்னோட கறுப்பு பொட்டை நோட்டீஸ் பண்ணி பாராட்டுறாங்க. எல்லா கிரெடிட்டும் ரஹ்மான் சாருக்குத்தான். அவரோட, மியூசிக்ல நான் பாடினதை ரொம்ப ஆசீர்வாதமா நினைக்கிறேன்”

”இத்தனை வருடங்கள் ரஹ்மான் மியூசிக்ல பாடிக்கிட்டிருக்கீங்களே... நீங்க அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயம்?”

“ரஹ்மான் சார் ரொம்ப சின்சியர். வெரி டெடிகேட்டிவ் பர்சன். ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். அதுதான், அவர்க்கிட்ட பிடிச்ச விஷயம். அவர்க்கிட்ட பாடும்போது பயம் இருக்காது. கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண வெச்சுடுவார். பாடகர் சரியா பாடுறாங்களான்னு மட்டுமில்ல, கோரஸ்ல பாடுறவங்களும் சரியா பாடுறாங்களான்னு நோட் பண்ணிக்கிட்டே இருப்பார்.

அவரோட ஸ்டூடியோவே ரொம்ப பாசிட்டிவ் வைப்ரேஷன் கொண்ட இடம். அங்க, நுழைஞ்சுட்டாலே ஒரு பாதுகாப்பான ஃபீலிங் நமக்கு வந்துடும். பாடுறது, கோரஸ் பாடுறதுன்னு நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். நாங்க மட்டுமில்ல, ஆடியன்ஸும் அவரைப் பார்த்தாலே நிறைய கற்றுக்க முடியும். இதைவிட முக்கியமானது, ரஹ்மான் சார் ஆபிஸ்ல பாடி முடிச்சதும் அதுக்கான பேமன்ட் கேக்கிறதுக்கு முன்னாடியே வந்துடும்”

பாடகி செளந்தர்யா

”இசைத்துறையில் 15 வருடங்களைக் கடந்துட்டீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?”

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் மதுரை பொண்ணு. அப்பா வழக்கறிஞர். அம்மா, இசைத்துறையில இருக்காங்க. பரதநாட்டியத்துல முனைவர் பட்டம் வாங்கினவங்க. அவங்க, படிச்ச இசை கல்லூரியிலேயே பேராரியர் ஆகி, பிரின்ஸ்பலும் ஆனாங்க. சின்ன வயசிலேர்ந்தே எனக்கு பாடுறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, என்னோட பயணம் சூப்பர் சிங்கர்ல 23 வயசுலதான் ஸ்டார்ட் ஆச்சு. சென்னைக்கு வந்தாதான் இன்னும் நல்லா என்னை வளர்த்துக்க முடியும்னு தோணுச்சு.

எங்கப்பாக்கிட்ட நான் காலேஜ் சென்னையிலதான் படிப்பேன்னு சொன்னதுக்கு, ‘நீ ப்ளஸ் டூவுல 1,000 மார்க்கு மேல எடுத்தாதான் உன்னை சென்னையில படிக்க வைப்பேன்’னு அப்பா கண்டிஷன் போட்டாரு. அதுக்காகவே, நல்லா படிச்சு ப்ளஸ்டூவுல 1,117 மார்க் எடுத்தேன். அதுக்கப்புறம்தான், சென்னைக்கு வந்து சூப்பர் சிங்கர் வாய்ப்பு எல்லாத்திலேயுமே கலந்துக்கிட்டேன். எனக்கு சின்ன வயசிலேர்ந்தே ரஹ்மான் சாரை ரொம்ப பிடிக்கும். ரஹ்மான் சார் பைத்தியம்னுக்கூட சொல்லலாம். சூப்பர் சிங்கர்ல ரஹ்மான் சாரை முதல் முதலில் நேர்ல பார்த்தேன்.

இன்னைக்கு அவர்க்கூடவே பயணிக்கிறது ரொம்ப சந்தோஷம். அதேமாதிரி, யுவன் சார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, தனியா இருக்கும்போது கேட்டா வேற ஒரு ஃபீலை கொடுக்கும். ‘உனக்காகத்தானே இந்த உயிர்...’ பாடல் எல்லாம் வேற லெவல். அவர்க்கூட கொழும்புல லைவ் பெர்ஃபாமன்ஸ் பண்ணியிருக்கேன். ‘என் காதல் சொல்ல...’ , ‘லூசு பெண்ணே...’ , ‘நம்ம காட்டுல...’ பாடல்களை அவர்க்கூட பாடும்போதே புல்லரிச்சுப்போச்சு”

ஏ.ஆர் ரஹ்மானுடன் செளந்தர்யா

”உங்களோட சம்பளத்துல அப்பா - அம்மாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்ன? 90-ஸ் கிட்டான உங்களுக்கு எப்போ திருமணம்?”

“கடவுள் புண்ணியத்துல நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதிலிருந்து அப்பா - அம்மாக்கிட்ட எதுக்கும் காசு கேட்டதில்ல. அதேமாதிரி, எதுக்கும் அகல கால் வைக்க மாட்டேன். தேவையான சின்ன சின்ன செலவுகள்தான் செய்வேன். உலகத்துக்கு காண்பிக்கணும்னு தேவையில்லாம ஆடம்பரம்லாம் செய்யமாட்டேன். அப்பா அம்மாவை வெளிநாட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும். அதுதான் ஆசை. ரீசண்டா 60 இன்ச் டிவி வாங்கிக்கொடுத்தேன். அது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

மற்றபடி, திருமணம் பண்ணிக்கணும்னு எனக்கு விருப்பம் இருக்கு. நான் ரொம்ப நேரத்தை கடத்துறேன்னு அப்பா அம்மாவுக்கு வருத்தம். கரெக்ட்டான நபரைத்தான் நான் திருமணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன். எனக்காக மேட்ரிமோனியல் எல்லாம் வரன் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அரேஞ்ச்டு மேரேஜ் ரொம்பவே அபத்தம். அது ஒரு பிசினஸ் டீல் மாதிரிதான். அதுல எனக்கு நம்பிக்கை இல்ல."

”முத்த மழை பாடல் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றாத்தை கொடுத்ததே... உங்களுக்கு எப்படி?”

“எங்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தான். படத்துல இந்த பாட்டு இடம்பெறாதுன்னு எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். வைரல் ஆன பிறகாவது வைப்பாங்கன்னு நினைச்சோம். வைக்காதது எங்களுக்கும் சின்ன ஏமாற்றம்தான். ’முத்த மழை’ பாட்டை கேட்டுட்டு ரசிகர்கள் சின்மயி வெர்ஷன் - தீ வெர்ஷன் விவாதங்கள் போனப்பவே இதுக்கே இவ்ளோ கதறுறாங்களே, படத்துல இந்த பாட்டு வராம போகும்போது என்ன பண்ணப்போறாங்களோன்னு நினைச்சேன்.

செளந்தர்யா

கடைசியா நம்ம எல்லோருக்கும் ஒரு அழகான பாட்டு கிடைச்சதுங்கிற மன நிறைவு போதும். அதேமாதிரி, சின்மயி - தீ யை ஒப்பிடவே வேணாம். ரெண்டு பேரும் அவங்கவங்க ஸ்டைல்ல பிரமாதமா பாடியிருந்தாங்க. தீ ஒரு குழந்தை. சூஃபி ஸ்டைல்ல ரொம்ப புரிஞ்சு பாடினாங்க. சின்மயி அக்கா அதை உற்சாகமாக இனிமையா பாடினாங்க. ‘மய்யா மய்யா...’ பாட்டு பாடினவங்க அவங்க. சூப்பர் சிங்கர் போட்டிகளில் ’மய்யா மய்யா’ ரொம்ப டஃப்பான பாட்டுன்னு எல்லோரும் எடுத்து பாடுற பாட்டு. அப்பேர்ப்பட்டவங்க ‘முத்த மழை’ பாடினா வேற எப்படி இருக்கும்?”

”சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உங்களோட சீசன்லதான் சிவகார்த்திகேயன் ஆங்கரா இருந்தார். அந்த நட்பு இப்போ எப்படி இருக்கு? உங்கக்கூட பாடினவங்க வேற யார்ல்லாம் நட்புல இருக்காங்க?

“சிவகார்த்திகேயன் எங்க சீசன்லதான் ஆங்கரா இருந்தார். ரொம்பவே வம்பிழுப்பார். அவர் எப்பவும் மாறவே இல்ல. மறக்கவும் இல்ல. மெசேஜ் பண்ணினா உடனே ரிப்ளை பண்ணுவார். ’அமரன்’ பார்த்துட்டு, பயங்கரா இருக்குன்னு மெசேஜ் பண்ணினேன். உடனே ரிப்ளை பண்ணினார். பழசை மறக்காம இருக்கிறது ரொம்ப நல்ல குணம். மற்றபடி எங்க சீசன்ல இருந்த சந்தோஷ், சாய் சரண், தீபக், ஸ்ரீனிவாஸ், சக்தின்னு எல்லாரும் நல்ல நண்பர்களா இருக்கோம். அடிக்கடி மீட் பண்ணிக்குவோம்”

”இளையராஜா- ரஹ்மான் - யுவன் - ஹாரிஸ் ஜெயராஜ் - அனிருத் - ஸ்ரீகாந்த் தேவா - ஜி.வி பிரகாஷ்- ஷான் ரோல்டன் இவர்களின் இசையில் உங்களின் ஃபேவரைட் பாடல்?”

”இளையராஜா சார் மியூசிக்குல ‘பார்த்த விழி...’,

ரஹ்மான் சார் மியூசிக்குல ‘இரு பூக்கள்’, ‘மலர்களே மலர்களே...’,

யுவன் சார் மியூசிக்குல, ‘ஒருநாளில் வாழ்க்கை...’, ‘மலர்களே...’, ‘உனக்காகத்தானே...’, ‘என் அன்பே...’ , புதுப்பேட்டையில எல்லா சாங்குமே பிடிக்கும்.

ஸ்ரீகாந்த் தேவா சார் மியூசிக்குல ‘ஆகாயம் பூமிக்கெல்லாம்...’ பாட்டு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, அந்த பாட்டை படத்துல பாடினதே நான் தான்.

இளையராஜாவுடன் செளந்தர்யா

‘மின்வெட்டு நாளில்...’, ‘நீ பார்த்த விழிகள்...’, ‘தேனி காத்தோரம்...’ பாடல்கள் அனிருத் சார் மியூசிக்குல பிடிக்கும்.

ஜி.வி சார் மியூசிக்குல ’காதல் நெருப்பின் நடனம்’ பிடிக்கும்.

ஷான் ரோல்டன் மியூசிக் மட்டுமில்ல, அவரது குரலும் ரொம்ப ஸ்பெஷல். ‘காதல் அரை ஒண்ணு விழுந்துச்சே...’, ஜோக்கர் படத்தின் ‘செல்லம்மா...’ பாடல் ரொம்ப பிடிக்கும்”

”மீ டூ பிரச்னையில் சின்மயி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறாரே? எப்படி பார்க்கிறீர்கள்?”

“இங்க பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளி ஆக்குறதுதான் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கு. பொய் சொல்றாங்க, கவன ஈர்ப்பு பன்றாங்க, வேற வேலையே இல்லையான்னுல்லாம் பேசுறாங்க. ஆனா, சின்மயி அக்கா பின்வாங்காம தொடர்ந்து போல்டா செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. சிலர் இப்போவரைக்கும் அவங்க சொல்ற குற்றச்சாட்டுகளை நம்பவே இல்ல. ஆனா, ’மீ டூ’ பிரச்னையில் ஆண்டவனே சின்மயி அக்காவுக்காக எல்லோரையும் இப்போ பேசவைக்கிறார். அவங்களோட தைரியம் எனக்கும் வருது. எதுக்கும் பயப்படக்கூடாதுங்குற துணிச்சல் கிடைச்சிருக்கு. அதேமாதிரி, பாதிக்கப்பட்டவங்க சொல்ற குற்றச்சாட்டுகளுக்கும் அவங்க வேலைக்கும் முடிச்சு போட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. சின்மயி அக்கா எனக்கு பெரிய நம்பிக்கை”

செளந்தர்யா

"ட்ரீம்?”

“ரஹ்மான் சார் மியூச்சிக்ல சோலோ பாடணும். அதுதான் என்னோட ட்ரீம். அடுத்ததா, நானே தனியிசை பாடல்களை உருவாக்கணும்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay: "உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும்" - விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜெயமோகன்!

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் ஸ்டீலர் காட்சி வெளியகி ரசிகர்கள் வ்ரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ... மேலும் பார்க்க

DNA: "கேரளாவில் எழுத்தாளர்களுக்கு கேரவன் கொடுப்பாங்க..." - போஸ் வெங்கட்

'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே ... மேலும் பார்க்க

DNA: 'அதர்வா ஒரு திறமையான நடிகர், அவர் இல்லையென்றால்...'- நடிகை நிமிஷா சஜயன்

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்...'- அதர்வா

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

Good Day: "குடிக்குப் பின்னாலுள்ள சமூக உளவியலைச் சொல்லும்" - தயாரிப்பாளரான நாயகன் பிரித்திவி பேட்டி

சமீபத்தில் நடந்த 'குட் டே' படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குற... மேலும் பார்க்க