ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு
ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்:
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக இருந்த நாகராஜன் ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக இருந்த இசக்கிப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வீடுகள்) உதவி திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
எஸ். சரவணபவா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மா. மகேஸ்வரன் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் எம்.பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் கி.ராமசாமி திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.பி.லதா, இ.மரியதாஸ், கே.அண்ணாதுரை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட அலுவலர்கள் பதில் நபரை எதிர்பார்க்காமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணியில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!