செய்திகள் :

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

post image

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்:

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக இருந்த நாகராஜன் ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக இருந்த இசக்கிப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வீடுகள்) உதவி திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ். சரவணபவா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மா. மகேஸ்வரன் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் எம்.பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் கி.ராமசாமி திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.பி.லதா, இ.மரியதாஸ், கே.அண்ணாதுரை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட அலுவலர்கள் பதில் நபரை எதிர்பார்க்காமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணியில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்!

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரதீப் என்பவரை கைது செய்த சென்னை நுங... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

பன் பட்டர் ஜாம் படத்தின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத... மேலும் பார்க்க

போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தென்னிந்திய மொழிகளைப் புறக்கணித்துவிட்டு சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சமஸ்கிருத மொழிக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கிவிட்டு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 தென... மேலும் பார்க்க

முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்! - டிடிவி தினகரன்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தைப் பற்றிய காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க